Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Srilanka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Srilanka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 03, 2021

விசித்திரமான கடற்கரையை நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

இலங்கையின் காலி மாவட்டம் உனவட்டுவன எனும் நகரத்தில் அமைந்துள்ள பேகொட எனும் சிறிய கிராமத்திலிருந்து கால் நடையாக  20 நிமிடங்கள் சென்று இந்த கடலை அடைய முடியும்


முற்றுமுழுதாக வனத்தால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சி தரும்  இந்த கடற்கரை   பவளப்பாறைகளுக்கு பெயர் பெற்றது

இந்த கடற்கைரைய சூழவுள்ள வனப்பிரதேசத்தில் மிகவும் ஆபத்தான இலங்கையில் அருகி வரும் குரங்கினம் என அண்மைய ஆய்வில் அறியப்பட்டுள்ள ஊதா நிற முகம் கொண்ட லங்கூர் என்ற குரங்கு இனங்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றன
இது பொதுவாக கூச்ச சுபாவம் உள்ள குரங்கினங்கள் ஆகும்
விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)

விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)


விசித்திரமான கடற்கரையை  நீங்கள் சென்று பார்க்க வேண்டுமா? - ( Jungle Beach)








ஆகவே இந்த குரங்குகளிடமிருந்து மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்

இது போன்ற மேலும் பல தகவல்களை பெற எமது பக்கத்தை  Like செய்யுங்கள்

 உங்கள் நண்பர்களுக்கும் எமது பக்கத்தை Share செய்து அறிமுகப்படுத்தி மேலும் எங்களின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளியுங்கள்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 02, 2021

பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகை

 இம்மாதம் 23ஆம் திகதி இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்


எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருப்பார்.

 இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகை



பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.

யுத்த காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.

அத்துடன் கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 02, 2021

மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள

 மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள சமரவீர..!


மியன்மாரில் ஜனநாயக நிர்வாகத்தைக் கவிழ்த்து இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள


அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ‘சிவில் மற்றும் நிர்வாக அதிகாரங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும்போது, மக்கள் ஆணைக்கு வலுச்சேர்க்கின்ற தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் செயற்பாடுகள முடிவிற்குக்கொண்டு வருவதற்கு அவர்கள் முற்படுவதைத் தவிர்க்க முடியாது.

இது மியன்மாரில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்


வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

சுவீடன் நாட்டில் வருடாந்த கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்

 அம்பாரைமாவட்டம் வரிப்பத்தான் சேனை அகமட் லெப்பை பாயிஸ் இன்ஷாபா அவர்களின் 12 வயது அருமை புதல்வி ஹம்தா அவர்கள் சுவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதல் நிலை பெற்றுள்ளார். இவருடைய ஒவியம் பல இலட்சம் பிரதிகளாக சிறுவர் நலன்புரி அமைப்பொன்றிற்காக பல மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்


ஜனவரி 29, 2021

இந்தியாவின் 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!


இலங்கைக்கு வந்து சோ்ந்தன இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...!!

இந்தியாவில் இருந்து 500,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு வந்தன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு மருத்துவமனையில் தொடங்கும்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஆறு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் மீது தடுப்பூசி திட்டம் நாளை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!

இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!



கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ஹோமகாமா அடிப்படை மருத்துவமனை, கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை மற்றும் அங்கோடாவில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐடிஎச்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்தார். 

இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் ஹேமந்தா ஹெரத் மேலும் தெரிவித்தார்.
ஜனவரி 29, 2021

கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!

 நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...


இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா மேலும் கூறினார்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்இ அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர்இ குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!



கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29, 2021

விமானப் படையினரால் கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

 கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!


கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.

அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.

இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!  கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.  நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.  அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.  இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 28 ஜனவரி, 2021

ஜனவரி 28, 2021

இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய

 இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் இனவாத ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை


புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய



நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளைச் சார்ந்தது.

அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 25.01.2021 அன்று வெளியிட்ட புதிய covid 19. சுற்றறிக்கையின் படி அன்டிஜன் ரத்து செய்து P C Rதான்  இனி எடுப்பது என்றும். P C R Positive   என்றால் 14 நாள் Quarantine நிலையத்தில் இருக்க தேவையில்லை 10 நாள்

 Quarantine நிலையத்திலும் 4 நாள்  வீட்டிலும் இருக்கலாம் என சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அன்பிஜன் பரிசோதனை ரத்து

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

Note:- Antigen test என்று யாரும் கூறி வந்தால் #புதிய_சுற்றறிக்கையின் படி அவர்களுக்கு ஒத்துழைப்பு வளங்கவேண்டிய அவசியம் கிடையாது. அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதேசமயம் P C R test ku பூரண ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
ஜனவரி 27, 2021

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை

 கொவிட்  19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது 


எனினும் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிரத்தியோக வகுப்புகளில் மாணவர்களை பலவந்தமாக அணைத்துக் கொண்டு அதற்காக பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்
இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை



அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக  நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதகமான நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்கான ஒரு மாற்று வழியாகவே இணையவழி கற்பித்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது

இதனை தமது பிரத்தியோக வகுப்புகளுக ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஇவ்வாறான ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்
ஜனவரி 27, 2021

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை!

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது இதனை தங்களுடைய சாதகமாகப் பயன்படுத்தி மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை பலவந்தமாக சேர்த்துக் கொண்டு அதற்கான பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை!


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இதனை தமது பிரத்தியோக வகுப்புக்கு ஆசிரியரகள் பயன்படுத்திக் கொள்வதானயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆசிரியர்கள் தங்களின் நடவடிக்ககையாக எடுத்துக் கொண்டார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஜனவரி 27, 2021

குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு

 இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அழைப்பு -  AFB இறந்தவர்களை எரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்களோ தெரியாது ..?  

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள்  தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள , உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன என்றும் சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி வருவதாகவும், மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திய முன்னேற்றகரமான அம்சங்களை ஜனாதிபதி ராஜபக்ச அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது எனவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது எனவும்மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் முடிவடைந்த 37 வருட பிரிவினைவாத போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச செய்தி சேவைஇது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும் ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு


மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளலாம என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சர்வதேச ஊடகம் குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல் போன்றவற்றை முன்னெடுக்குமாறு ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளளது
ஜனவரி 27, 2021

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது. 

    

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 

கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் உயிர்கள் கட்டாயமாக தகனம் செய்;யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்நிலையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று பதில் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயம் எரிப்பதில் மிக பிடிவாதமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது எனலாம். 
மேலும், அமைச்சர் ரம்புக்கெவல தெரிவிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் அவர்  தெரிவித்தார். 

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

ரஞ்சன் சிறைசென்றது ஒரு அரசியல் ரீதியான பலிவாங்களா? -உதயன் கம்பல

 

'பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுமேயானால், ரஞ்சன் ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அக்கட்சியினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார். அமைச்சர் உதய கம்மன்பில எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.

 


கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து வெளியிட்டதுடன், ஹரீன் பெர்னாண்டோவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடமும் பொலிஸ் மாஅதிபரிடமும் கேட்டிருக்கிறாரே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 பதில்: -செய்வதற்க எதுவும் இல்லாததால் எதிர்க் கட்சியினர் இந்த விடயத்தை வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர். எதிர்க் கட்சியினர் கூறுவதைப் போல் ஜனாதிபதி அவரது பேச்சில் ஹரின் பெர்னாண்டோவை அச்சுறுத்தவில்லை. செய்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் அடிப்படையற்ற இந்த விடயத்தை வைத்து இல்லாத விடயங்களை உருவாக்க எதிர்க் கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

 

கே: ரஞ்சன் ராமநாயக்கவின் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ஒரு அரசியல் பழிவாங்கல் முயற்சியாகக் காட்ட எதிர்க் கட்சியினர் முனைகின்றனர். இது பற்றிய உஙகள் கருத்து என்ன?

 பதில்: - ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் ஒரு அரசியல் பழி வாங்கல் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறுமாக இருந்தால், ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விசாரித்த நீதிபதிகள் அப்போதைய அரசியலமைப்பு சபையின் சிபாரிசின் பேரில்அவர்களது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தால் அதற்கான பொறுப்பை எதிர்க் கட்சியினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த தீர்ப்பின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வந்தார். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கு அவர் வேண்டுமென்றே முயற்சித்தார். எனவே இவ்வாறான தீர்ப்பு அவருக்கு ஏற்றதாகும்.

 கே: -இலங்கைக்கு கொவிட்19 தடுப்பு மருந்துகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய மற்றும் சீன பிரதமர்களுக்கு கடிதமெழுதியுள்ளார். இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பான தற்போதைய நிலை என்ன?

 

பதில்: -எமது மக்களின் உயிர்களை பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் வரை அரசாங்கம் இப்போது பொறுமை காத்து வருகிறது. மேற்படி நட்பு நாடுகள் இரண்டுக்கும் கடிதம் எழுதியுள்ள எங்கள் ஜனாதிபதி, இலங்கைக்கு விரைவில் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதை விரைவுபடுத்த தனது பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார்.

 

ஏதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என நம்பலாம்.

 

கே: பலம் மிக்க எதிர்க் கட்சி இல்லாமை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -பலம் மிக்க எதிர்க் கட்சியானது பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகவும் இருக்க வேண்டும். பலம் மிக்க எதிர்க் கட்சி பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அது அது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். 1977 இல் எதிர்க் கட்சியில் 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். எனவே இது ஒன்றும் புது விடயமல்ல. எவ்வாறெனினும் அரசாங்கம் தவறான வழியில் சென்றால் அதனைச் சுட்டிக் காட்ட பலம் மிக்க எதிர்க் கட்சி எமக்குத் தேவைப்படுகின்றது.

 

கே: கொவிட் 19 நடவடிக்கைகளை கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையானது நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் கட்சி கூறுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -இது ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஏனெனில் சுகாதார அதிகாரிகளையோ நிர்வாக அதிகாரிகளையோ இராணுவம் மாற்றவில்லை. நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்கள் உள்ளன. தனிமைப்படுத்தல் அல்லது நிவாரண பங்கீடு ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உள்ளூர் தலைவர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ள வேண்டும்.

  

இதனால்தான் இராணுவத் தளபதி 25 மேஜர் ஜெனரல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

 

எனவே மாவட்ட செயலாளர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொள்ள முடியும்.

 

எதிர்க்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு இராணுவ மயப்படுத்தலும் இல்லை. மாவட்ட மட்டத்தில் 25 தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

 கே: மேல் மாகாண சபை முன்னாள் அமைச்சர் என்ற வகையில் மாகாண சபை முறைமையை தொடர்வது நியாயபூர்வமானதா? அது பொதுமக்கள் பணத்தை விரயமாக்கும் ஒரு செயல் என்று சிலர் கூறுகிறார்களே?

 

பதில்: -கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை தேவையற்றது என்று முன்னைய நல்லாட்சி அரசு கருதியது. அதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேல் பின்போட்டார்கள். நாம் இப்போது புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருகிறோம். அது தொடர்பாக மக்கள் அபிப்பிராயம் கோரப்படும். மாகாண சபைகள் தேவையா அல்லது வேறு முறை தேவையா என்பதை மக்கள் அப்போது தீர்மானிக்கலாம்.

 கே: அரசாங்கம் தற்போது தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக மகாசங்கத்தின் ஒரு பகுதியினர் பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை உள்ளதா?

 

பதில்: - தற்போதைய நிர்வாகத்தை அமைப்பதில் மகாசங்கத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த மகாசங்கத்தினருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேவேளை அவர்கள் சொல்வதைக் கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மகாசங்கத்தினர் அவர்களது பாரம்பரிய பங்களிப்பையே நிறைவேற்றுகின்றனர். அது அவர்களது உரிமை. எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

 கே: நாட்டில் நாளாந்தம் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு கதவுகளை திறந்து விடுவது சரியென்று நினைக்கிறீர்களா?

 

பதில்: -நாங்கள் சுமார் ஒரு வருட காலமாக சுற்றுலாத் துறையினருக்கு கதவை அடைத்து வைத்திருந்தோம். மிகவும் தேவையான வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதற்கு சுற்றுலாத்துறை முக்கியமாகும். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் பயணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய முறையைப் பயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பயணம் செய்ய வழி செய்திருக்கிறோம். நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு கொவிட் 19 தொற்றாளர்கள் இருப்பது உண்மைதான். அந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்பினால் நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்?

 கே: வடபகுதி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரிவினைவாத எண்ணங்களில் இருந்து மாறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

பதில்: வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.

 

உதித்த குமாரசிங்க

தமிழில்: என். ராமலிங்கம்

நன்றி  - தினகரன்

ஜனவரி 23, 2021

சுகாதார அமைச்சருக்கு கொரணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சுகாதார அமைச்சர் பவித்திர வண்ணியராச்சிக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று இது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிழலையில் சுகாதார அமைச்சருக்கும் தற்போது தொற்றுயுள்ளாராக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்கு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் அவருக்கு கொரணா தொற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவரும் கேகாலை தம்மிக்கையின் பாணியினை அருந்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர்பவித்ராவன்னியராச்சிக்குகொரோனாதொற்றுஏற்பட்டுள்ளதாகசுகாதாரஅமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில்அமைச்சர்பவித்ராவன்னியாரச்சிஇலங்கையில்கொவிட்-19 தொற்றுக்குள்ளான5ஆவதுபாராளுமன்றஉறுப்பினராவார்.

 

கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டசுகாதாரஅமைச்சர்பவித்ராவன்னியராச்சிதற்போதுஹிக்கடுவவில்உள்ளசிகிச்சைநிலையமொன்றில்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்.

 

இதேவேளை பவித்ராவன்னியாரச்சிநேற்றையதினம்(22) ஸ்ரீஜயவர்தனபுரமருத்துவமனையில்நடைபெற்றநிகழ்வொன்றில்பங்கேற்றிந்ததோடு, இந்நிகழ்வில்அவருடன்சுகாதாரசேவைகள்பணிப்பாளர்நாயகம்அசேலகுணவர்தனஉள்ளிட்டசுகாதாரத்துறையின்உயர்அதிகாரிகளும்கலந்துகொண்டிருந்தனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 


அத்துடன், (21.01.2021) நெலும்மாவத்தையில்ஶ்ரீலங்காபொதுஜனபெரமுனகட்சிஅலுவலகத்தில்இடம்பெற்றநிகழ்வொன்றிலும்அமைச்சர்பவித்ராபங்கேற்றிருந்தார்.

 

அந்த வகையில், இதற்குமுன்னர்இராஜாங்கஅமைச்சர்தயாசிறிஜயசேகர, ரஊப்ஹக்கீம்எம்.பி., அமைச்சர்வாசுதேவநாணயக்கார, இராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தஆகியஐந்துபாராளுமன்றஉறுப்பினர்களுக்குகொரோனாவைரஸ்தொற்றுஏற்பட்டிருப்பதுகண்டறியப்பட்டிருந்தது. இதில்தயாசிறிஜயசேகரகுணமடைந்துதற்போதுவீட்டில்சுயதனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்என்பதும்குறிப்பிடத்தக்கது.

 

அமைச்சர் பவித்ராவன்னியாரச்சிநிகழ்வொன்றின்போது, கேகாலையைச்சேர்ந்தஆயுர்வேதவைத்தியர்எனதம்மைஅடையாளப்படுத்திவரும்தம்மிகபண்டாரதயாரித்த, கொரோனவைரஸுக்குஎதிரானநோயெதிர்ப்புசக்தியைகொண்டபாணியைஅருந்தியிருந்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

இப்பாணியை அருந்தியஇராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தவும்கொரோனாதொற்றுக்குள்ளானமைகுறிப்பிடத்தக்கது.

 

இதற்கு முன்னர்பாராளுமன்றத்தில்மேற்கொண்டPCR சோதனையில்அங்குகடமையாற்றும்ஒன்பதுபேருக்குகொரோனாவைரஸ்தொற்றுஇருப்பதுகண்டறியப்பட்டிருந்தது.

ஜனவரி 23, 2021

இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஓமான் விமானம்..!

நீர் பீச்சியடித்து வரவேற்பு...!

கொரோனா பரவல் காரணமாக  மூடப்பட்ட விமான நிலையம்  10 மாதங்களுக்கு பின்  இன்று  (21 ) மீள சகல பயணிகளுக்குமாக  கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையம்திறக்கப்பட்டுள்ளன. 
 இதன்படி  இலங்கையர்களை ஏற்றிய முதலாவதுவிமானம் Oman Air WY – 371    ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 50 இலங்கையர்கள் குறித்த விமானம்கடடுநாயக்க விமான நிலையத்தில் 7.30am இற்கு  தரையிறங்கியது.  விமானத்திற்கு நீர் பீச்சியடித்து Water salutes  வரவேற்பளிக்கப்பட்டது.
விமானத்தில் வருகைதந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் வணிக விமானம்மூலம் வருகை தந்தனர். இதுவரை காலமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் விசேடமாகஅழைத்துவரப்பட்டனர். இனி குறைந்த கட்டணங்களில் வரமுடியும்.
சுற்றுலா விசா, குடியுரிமை விசா மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை விசாக்களை Tourist Visa, Resident Visa,  Investors  ,  Dual Citizens  பயன்படுத்தி  இலங்கைக்கு வரலாம்.
குடிவரவு மற்றும்குடியகல்வுத் திணைக்களத்தால்  ஒன்லைனில் விசா வழங்கப்படும்.
மேலும் சுமார்15 விமானங்கள் தினம் இலங்கைக்கு வரவுள்ளன.








வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

நுவரெலியாவில் 1.8 றிச்சட் அளவில் நில அதிர்வு

நுவரெலியா வலப்பனை பகுதியில் 1.8 றிச்சட் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வானது குறிப்பிட்ட சில பகுதிகளில் இதன் பாதிப்பு உணரப்பட்டது. 




ஜனவரி 22, 2021

இலங்கை கடற்படைப்படகில் மோதுண்டு இந்திய மீனவர்களின் உயிரழிப்புக்கு இந்தியா தனது கண்டத்தை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழைமை சட்டவிரோதமான முறையில் இலங்கையில் கடற்பரப்பில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரே கொள்ளப்பட்டவராகும். இதற்கு இந்திய உயிரழந்த மீனவர்கள் தொடர்பில் இலங்கைக்கான தூதுவரை அழைத்து தனது கவலையை  இந்தியா தெரிவித்துள்ளது.

இதே வேளை இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தடுக்கும் நோக்கும் சென்ற வேளை அவர்கள் பயணித்த படகு சேதமடைந்து இந்த உயிரழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 22, 2021

இலங்கையில் கோஸ்பட் சேனகா கொரணா தடுப்புசியை பயன்படுத்துவதற்காக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி

 கொரணாவினை நாட்டில் பல்வேறுபகுதிகளில் கட்டுப்படுத்தும் நோக்கும் பலருடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் இத் தடுப்புசியினை நாட்டுக்கு கொண்டுவரும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனேகா தடுப்புசியினை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சவை அனுமதி வழங்கியுள்ளது. 


மேலும் இத்தடுப்புசியான எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.