இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது இதனை தங்களுடைய சாதகமாகப் பயன்படுத்தி மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை பலவந்தமாக சேர்த்துக் கொண்டு அதற்கான பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இதனை தமது பிரத்தியோக வகுப்புக்கு ஆசிரியரகள் பயன்படுத்திக் கொள்வதானயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆசிரியர்கள் தங்களின் நடவடிக்ககையாக எடுத்துக் கொண்டார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக