Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Political லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Political லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜனவரி, 2021

ஜனவரி 28, 2021

இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய

 இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் இனவாத ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை


புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய



நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளைச் சார்ந்தது.

அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஜனவரி 26, 2021

இனவாதம் பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்

 ஆட்சியை பிடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்...!!!


இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன்...!!!

ஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று திங்கட்கிழமை (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சற்று ஆவேசப்பட்ட நிலையில் கருத்த வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Mp, ஐக்கிய தேசியக் கட்சி இனவாதமற்ற கட்சி,  சகல சமூகங்களையும் அரவணைத்து சென்ற கட்சி. அதனை விட மேம்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் அமைய வேண்டும்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர், இனவாதத்தை கையில் எடுத்திருப்பது போன்று தோன்றுகிறது. இதனை ஏற்க முடியாது. இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன். ஏற்கனவே  ஜனாதிபதி கோத்தபய, பிரதமர் மகிந்த ஆகியோரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுடன் இணையுமாறு எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர்.

நான் இனவாதத்திற்கு எதிரானவன். ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள். எமக்கு கொள்கையே முக்கியம். அந்தக் கொள்கைக்காகவே நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளேன். இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இனவாதம்  பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்



ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற, பாராளுமன்ற உறுப்பினர்களினால்  இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனாசா எரிப்புக்கு எதிராக, சரத் பொன்சேக்கா பதிவிட்ட கருத்துதொன்றுக்காக அண்மையில் முஜிபுர் ரஹ்மான் பொன்சேக்காவிடம் நேரடியாக முரண்பட்டதும், சஜித் பிரேமதாசவிடம் இதுபற்றி முறையிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(Anzir)

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

மனித உரிமை தொடர்பாக நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை கவனத்தில் எடுக்க வேண்டும் - அசாத் சாலி ...!!!!

 நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத் சாலி ...!!!!


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவில் பங்கேற்கும் நீதிபதி A.H.M.D. நவாஸ் தன் மீதான சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி.

நீதிபதி நவாஸ் இக்குழுவில் இடம்பெறுவதானது, ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அவர் நியாயமான முறையில் நடந்து கொள்வார் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம்களை பாரிய மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பும் மனித உரிமை மீறல் என்பதாலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தெற்காசிய மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவும் அரசின் தவறை சுட்டிக்காட்டியிருக்கின்றன.



நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத் சாலி ...!!!!


இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற அடிப்படையில் இந்த அநீதியையும் இணைத்து அதற்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பும் அவர் மீதிருப்பதை நீதிபதி நவாஸ் நினைவில் வைத்து, அல்லாஹ்வைப் பயந்து நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என தாம் வேண்டிக்கொள்வதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

ரஞ்சன் சிறைசென்றது ஒரு அரசியல் ரீதியான பலிவாங்களா? -உதயன் கம்பல

 

'பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுமேயானால், ரஞ்சன் ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அக்கட்சியினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார். அமைச்சர் உதய கம்மன்பில எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.

 


கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து வெளியிட்டதுடன், ஹரீன் பெர்னாண்டோவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடமும் பொலிஸ் மாஅதிபரிடமும் கேட்டிருக்கிறாரே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 பதில்: -செய்வதற்க எதுவும் இல்லாததால் எதிர்க் கட்சியினர் இந்த விடயத்தை வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர். எதிர்க் கட்சியினர் கூறுவதைப் போல் ஜனாதிபதி அவரது பேச்சில் ஹரின் பெர்னாண்டோவை அச்சுறுத்தவில்லை. செய்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் அடிப்படையற்ற இந்த விடயத்தை வைத்து இல்லாத விடயங்களை உருவாக்க எதிர்க் கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

 

கே: ரஞ்சன் ராமநாயக்கவின் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ஒரு அரசியல் பழிவாங்கல் முயற்சியாகக் காட்ட எதிர்க் கட்சியினர் முனைகின்றனர். இது பற்றிய உஙகள் கருத்து என்ன?

 பதில்: - ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் ஒரு அரசியல் பழி வாங்கல் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறுமாக இருந்தால், ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விசாரித்த நீதிபதிகள் அப்போதைய அரசியலமைப்பு சபையின் சிபாரிசின் பேரில்அவர்களது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தால் அதற்கான பொறுப்பை எதிர்க் கட்சியினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த தீர்ப்பின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வந்தார். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கு அவர் வேண்டுமென்றே முயற்சித்தார். எனவே இவ்வாறான தீர்ப்பு அவருக்கு ஏற்றதாகும்.

 கே: -இலங்கைக்கு கொவிட்19 தடுப்பு மருந்துகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய மற்றும் சீன பிரதமர்களுக்கு கடிதமெழுதியுள்ளார். இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பான தற்போதைய நிலை என்ன?

 

பதில்: -எமது மக்களின் உயிர்களை பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் வரை அரசாங்கம் இப்போது பொறுமை காத்து வருகிறது. மேற்படி நட்பு நாடுகள் இரண்டுக்கும் கடிதம் எழுதியுள்ள எங்கள் ஜனாதிபதி, இலங்கைக்கு விரைவில் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதை விரைவுபடுத்த தனது பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார்.

 

ஏதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என நம்பலாம்.

 

கே: பலம் மிக்க எதிர்க் கட்சி இல்லாமை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -பலம் மிக்க எதிர்க் கட்சியானது பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகவும் இருக்க வேண்டும். பலம் மிக்க எதிர்க் கட்சி பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அது அது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். 1977 இல் எதிர்க் கட்சியில் 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். எனவே இது ஒன்றும் புது விடயமல்ல. எவ்வாறெனினும் அரசாங்கம் தவறான வழியில் சென்றால் அதனைச் சுட்டிக் காட்ட பலம் மிக்க எதிர்க் கட்சி எமக்குத் தேவைப்படுகின்றது.

 

கே: கொவிட் 19 நடவடிக்கைகளை கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையானது நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் கட்சி கூறுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -இது ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஏனெனில் சுகாதார அதிகாரிகளையோ நிர்வாக அதிகாரிகளையோ இராணுவம் மாற்றவில்லை. நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்கள் உள்ளன. தனிமைப்படுத்தல் அல்லது நிவாரண பங்கீடு ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உள்ளூர் தலைவர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ள வேண்டும்.

  

இதனால்தான் இராணுவத் தளபதி 25 மேஜர் ஜெனரல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

 

எனவே மாவட்ட செயலாளர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொள்ள முடியும்.

 

எதிர்க்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு இராணுவ மயப்படுத்தலும் இல்லை. மாவட்ட மட்டத்தில் 25 தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

 கே: மேல் மாகாண சபை முன்னாள் அமைச்சர் என்ற வகையில் மாகாண சபை முறைமையை தொடர்வது நியாயபூர்வமானதா? அது பொதுமக்கள் பணத்தை விரயமாக்கும் ஒரு செயல் என்று சிலர் கூறுகிறார்களே?

 

பதில்: -கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை தேவையற்றது என்று முன்னைய நல்லாட்சி அரசு கருதியது. அதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேல் பின்போட்டார்கள். நாம் இப்போது புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருகிறோம். அது தொடர்பாக மக்கள் அபிப்பிராயம் கோரப்படும். மாகாண சபைகள் தேவையா அல்லது வேறு முறை தேவையா என்பதை மக்கள் அப்போது தீர்மானிக்கலாம்.

 கே: அரசாங்கம் தற்போது தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக மகாசங்கத்தின் ஒரு பகுதியினர் பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை உள்ளதா?

 

பதில்: - தற்போதைய நிர்வாகத்தை அமைப்பதில் மகாசங்கத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த மகாசங்கத்தினருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேவேளை அவர்கள் சொல்வதைக் கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மகாசங்கத்தினர் அவர்களது பாரம்பரிய பங்களிப்பையே நிறைவேற்றுகின்றனர். அது அவர்களது உரிமை. எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

 கே: நாட்டில் நாளாந்தம் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு கதவுகளை திறந்து விடுவது சரியென்று நினைக்கிறீர்களா?

 

பதில்: -நாங்கள் சுமார் ஒரு வருட காலமாக சுற்றுலாத் துறையினருக்கு கதவை அடைத்து வைத்திருந்தோம். மிகவும் தேவையான வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதற்கு சுற்றுலாத்துறை முக்கியமாகும். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் பயணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய முறையைப் பயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பயணம் செய்ய வழி செய்திருக்கிறோம். நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு கொவிட் 19 தொற்றாளர்கள் இருப்பது உண்மைதான். அந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்பினால் நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்?

 கே: வடபகுதி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரிவினைவாத எண்ணங்களில் இருந்து மாறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

பதில்: வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.

 

உதித்த குமாரசிங்க

தமிழில்: என். ராமலிங்கம்

நன்றி  - தினகரன்

புதன், 20 ஜனவரி, 2021

ஜனவரி 20, 2021

முன்னால் ஜனாதிபதி மைத்திரி உயிரிழந்த உயிர்களை தகனம் செய்வது சட்டமல்லை என தெரிவிப்பு

கொரோனாவால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எந்தச் சட்டத்திலும் இல்லை...!!!

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வரவேண்டும். நினைவேந்தல் உரிமையை வேண்டுமென்றே தட்டிப் பறிப்பதும், இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுப்பதும் அடக்கு முறையின் உச்சக்கட்டத்தையே எடுத்துக்காட்டுகின்றது இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



இறுதிப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் போதே அவர் மேற்கண்டவாறுகூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எந்தச் சட்டத்திலும் இல்லை.

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்திக்கூற விரும்புகின்றேன் என்றார்

சனி, 16 ஜனவரி, 2021

ஜனவரி 16, 2021

சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை ஹரீஸ் எம்பி என


கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் என்னுடைய பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி சில செய்திகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. 

அவை அப்பட்டமான பொய்யான செய்திகள் எனவும் அந்த செய்திகளுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை எனவும் மறுக்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அந்த செய்திகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அந்த செய்திகளை என்னுடைய அரசியல் வாழ்வின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் முகவரியற்ற ஒரு சிலரே செய்திருக்கிறார்கள் என நம்புகிறேன். 

இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட பொய்யான பரப்புரைகளை கொண்டு அவர்களின் மீது இந்த சமூகத்திற்கு இருக்கும் அவநம்பிக்கையை திசை திருப்பி என்னுடைய அரசியல் நடவடிக்கைகளையே அல்லது மக்கள் என் மீதும் முஸ்லிங்களின் தாய் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கலாம் என நினைப்பது அவர்களின் முட்டாள் தனமாகும்.

இப்படியானவர்களுக்கு இறைவன் நல்ல சிந்தனைகளை கொடுத்து இனிமேலும் சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களை தெரிவிப்பதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என பிராத்திக்கிறேன் என்றார்.

(அபு ஹின்ஸா)

திங்கள், 11 ஜனவரி, 2021

ஜனவரி 11, 2021

ஜனாதிபதியின் உரையினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஹரீன் எம்.பி மேலதிக பாதுகாப்பு கோரல்

 


அம்பாறை உகன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி அவர்கள் கோட்டாபாய பேசிய பேச்சில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஹரீன் பெர்ணாட்டோ எம். பி அவர்கள் தனக்கு மேலதிக பாதுகாப்பு தேவையென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்விடயம் தொடர்பாக அவர் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்படி விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனவரி 11, 2021

ரவுப் ஹக்கீமுடன் தொடர்புடைய பலர் சுய தனிமைப்படுத்தலில்



 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தினால் அவருடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியம் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருவதுடன் ரவுப் ஹக்கிமுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை சுய தனிமைப்படுது்தலுக்கு உட்படுத்த சி.சி..ரிவி காட்சிகளை பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.