மருதமுனையைச் சேர்ந்த முஸம்மில் அதிபர் 34 வருட சேவையிலிருந்து ஓய்வு
-றாசிக்நபாயிஸ்-
மருதமுனைஅல்-மனார் மத்திய கல்லூரியின்பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவிற்குபொறுப்பான அதிபர் முகையதீன் முஸம்மில்(B.Com, PGDE, SLPS-1) அவர்கள்தனது 34 வருட கால கல்விச்சேவையிலிருந்து (24) ஓய்வு பெறுகின்றார்.
இப்றாலெப்பைமுகையதீன், முஹம்மது இஸ்மாயில் சாபிறா உம்மா தம்பதிகளுக்குஇரண்டாவது மகனாகப் பிறந்த அவர்தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்கல்வி கற்று 19வது வயதில்பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குதெரிவாகி வணிகத்துறையில் பட்டம் பெற்றார்.
ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மதுஅபூபக்கரின் மகளான சித்தி ஜெஸிறாவைகரம் பிடித்து ஒரு ஆண் மற்றும்இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சிறந்ததந்தையாகி அவர்களையும் கல்விப் புலத்தில் சிறந்துவிளங்க அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.
1987ஆம்ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்டு கல்முனைமஹ்மூத் பாலிகா பெண்கள் கல்லூரியில்தனது முதல் நியமனத்தை பெற்று07 வருட காலம் சிறந்த ஆசிரியர்பணியை ஆற்றினார்.
1993ஆம்ஆண்டு இடமாற்றம் பெற்று பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். அதன் பின்னர் 1994ஆம்ஆண்டு நற்பிட்டிமுனை,
அல்-அக்ஸா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்பெற்று அங்கு இரண்டு வருடங்கள்கடமையாற்றிய நிலையில் 1996ஆம் ஆண்டு மருதமுனைஷம்ஸ் மத்திய கல்லூரிக்கு இடமாற்றம்பெற்று வந்து கல்விப்பணி ஆற்றியநிலையில் 1998ஆம் ஆண்டு கல்முனைஇஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
அங்கிருந்து2001ஆம் ஆண்டு கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டு தனது ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவேற்றியநிலையில் 2005ஆம் ஆண்டு இப்பாடசாலையில்உயர் தர மாணவர்களுக்கு வர்த்தகப்பிரிவை ஆரம்பிப்பதற்கு அயராது பாடுபட்டு வெற்றியும்கண்டார்.
2009ஆம்ஆண்டு வருடாந்த இடமாற்றத்தின் போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில்இணைந்து தனது ஆசிரியர் பணியினைசிறப்பாக செய்யும் வேளையில் அவரின் திறமைகளை கண்டஅதிபர் கா.பொ.த.சாதாரண பிரிவுக்கான பகுதித்தலைவர் பொறுப்பைக் கொடுத்த போது தனதுபணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினார்.
03/10/2012 ஆம்ஆண்டு தரம்-11 அதிபர் சேவையில்நியமனம் பெற்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின்பிரதி அதிபராகவும், பெண்கள் மற்றும் ஆரம்பப்பிரிவுக்கு பொறுப்பான அதிபராகவும் கடந்த 08 வருட காலமாக சிறப்பாககடமையாற்றிய நிலையில் 01/01/2020 ஆம் ஆண்டு தரம்-1க்கு அதிபர் சேவையில்தகுதி பெற்றார்.
இவரின்பொறுப்பு அதிபர் சேவைக்காலப் பகுதியில்பல சவால்களை எதிர்கொண்டு
அல்-மனார் மத்திய கல்லூரியின்கல்வி வளர்ச்சி, பௌதீகவள அபிவிருத்தி மற்றும் ஏனையசெயற்பாட்டிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புசெய்து வந்துள்ளதுடன் குறிப்பாக பெண்கள் ஆரம்பப் பிரிவின்கல்வி வளர்ச்சியிலும் பெளதீகவள அபிவிருத்தியிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைவழங்கியமையினால் பாடசாலையின் அபிவிருத்தி சபையிலும் பெற்றோர் மத்தியிலும் சிறந்த நன்மதிப்பைக் கொண்டிருந்தார்.
குறிப்பாகதனது அயராத முயற்சியின் ஊடாககல்விப் பணிமனை, பெற்றோர், பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள்போன்றோரின் ஒத்துழைப்பின் மூலம் பெண்கள் மற்றும்ஆரம்ப பிரிவில் கனிஷ்ட பேன்ட் வாத்தியக்குழு, முதலுதவிக் குழு, சுற்றாடல் கழகம், விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம்மற்றும் கணணிக் கூடம்
என்பவற்றினையும்உருவாக்கியதுடன் மாணவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளைமேலோங்கச் செய்ய பூரண ஒத்துழைப்பையும்ஒத்தாசைகளையும் வழங்கி வந்தார்.
இதன் மூலம் ஐந்தாம் ஆண்டுபுலமைப் பரிசில் பரீட்சையில் 2016ஆம்ஆண்டு 35 மாணவர்கள் ஒரே தடவையில் சித்திபெற வழிகாட்டியதுடன் 2019ஆம் ஆண்டு கா.பொ.த.சாதாரணபரீட்சையில் பெண் மாணவிகள் சிறப்பானசித்திகளைப் பெறுவதற்கு துணை நின்றது
மாத்திரமல்லாமல்தமிழ்த் தின, ஆங்கிலப் போட்டிகளில்மாணவிகளை பிரதேச, மாவட்ட, மாகாணமட்டங்களில் வெற்றி பெறவைத்து தேசியமட்டத்துக்கு அனுப்பி முதலிடம் பெறவைத்து பலரை தங்கப் பதக்கம்பெற வழி சமைத்தார்.
இப்படியாகஅல்-மனார் மத்திய கல்லூரியின்சகல வளர்ச்சிக்கும் தனது முழுமையான பங்களிப்பினைதனது சேவைக் காலத்திற்குள் வழங்கிஎல்லோர் மனங்களிலும் முத்தாக இருந்து வருகிறார்.







