(எம் .என்.எம்.அப்ராஸ் )
கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 2020ம் வருடம் கொள்வனவு செய்வதற்காக தெரிவில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் அவர்கள் எழுதிய "கல்முனை_உள்ளூராட்சி_நிருவாகம்"
(250 வருட வரலாற்றுப் பதிவுகள் ) மற்றும் "இலங்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதித்_தேர்தல்கள் "ஆகிய இரண்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் இலக்கியம் மற்றும் ஆய்வு துறையில் இவர் இளங்கலைஞர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தேசிய நாளிதழான நவமணி பத்திரிகையில் ஒவ்வொரு கிராமங்களின்ள வரலாற்று தொகுப்பு என்ற தொடர் கட்டுரையை கடந்த நாட்களில் எழுதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக