Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Health லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Health லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

பிப்ரவரி 02, 2021

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது சிறப்பு

 65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது சிறப்பு



1. கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.

2. வேகமாக திரும்பாதீர்கள்.

3. கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.

4. நின்றவாறு கால்சட்டை(Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள்.

5. Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.

6. இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.

7. பின்புறமாக நடக்காதீர்கள்.

8. எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்.

9. படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள்.

10. உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

பின்வரும் நான்கு விசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும்.

2. சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.


3. கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.

4. திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.

இது உபயோகமானது எனக் கருதினால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

சனி, 30 ஜனவரி, 2021

ஜனவரி 30, 2021

மருதமுனை வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றல்

 பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் DR.சுகுணன்  அவர்களின் பணிப்புரையின் பேரில்

இன்று அதாவது (30-01-2021)9:00 மணி அளவில் மருதமுனை வைத்திய சாலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR அஸ்மி அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இன்று கொவிட் 19 தடுப்பூசி போடுகின்ற நிகழ்வு இடம் பெற்றதுஇந்த நிகழ்விலன் போது முதல் தடுப்பு ஊசியினை DR.MOH.Asmee அவர்கள் போட்டுக்கொண்டார்கள் அதனைத் தொடர்ந்து அனைத்துப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தாதிமார்கள் ஏனைய ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசியினைச் செலுத்திக் கொண்டார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்பதற்காகவும் மக்களை விழிப்பூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கு உதவியவர்கள்Dr.சுகுணன் (பிராந்திய சுகாதார அதிகாரி)DR.ஆரிப் (பிராந்திய தொற்று நோய்கள் அதிகாரி) அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்கள் வைத்திய அதிகாரிdr.அஸ்மீ அவர்கள்.
மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்

மருதமுனை வைத்தியசாலையில்  தடுப்பூசி ஏற்றல்






வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

இந்தியாவின் 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!


இலங்கைக்கு வந்து சோ்ந்தன இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...!!

இந்தியாவில் இருந்து 500,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு வந்தன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு மருத்துவமனையில் தொடங்கும்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஆறு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் மீது தடுப்பூசி திட்டம் நாளை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!

இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!



கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ஹோமகாமா அடிப்படை மருத்துவமனை, கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை மற்றும் அங்கோடாவில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐடிஎச்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்தார். 

இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் ஹேமந்தா ஹெரத் மேலும் தெரிவித்தார்.
ஜனவரி 29, 2021

கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்

 

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை  ஏற்றிக்கொண்ட முதல் வைத்தியர்!


இலங்கையில் கொரோனா தடுப்பூசியை அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் (ஐ.டி.எச்) மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம பெற்றுக் கொண்டுள்ளார்.
கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்

கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனீகா கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆறு வைத்தியசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், முதலாவது தடுப்பூசி படையினருக்கு செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டமாக இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 25.01.2021 அன்று வெளியிட்ட புதிய covid 19. சுற்றறிக்கையின் படி அன்டிஜன் ரத்து செய்து P C Rதான்  இனி எடுப்பது என்றும். P C R Positive   என்றால் 14 நாள் Quarantine நிலையத்தில் இருக்க தேவையில்லை 10 நாள்

 Quarantine நிலையத்திலும் 4 நாள்  வீட்டிலும் இருக்கலாம் என சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அன்பிஜன் பரிசோதனை ரத்து

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

Note:- Antigen test என்று யாரும் கூறி வந்தால் #புதிய_சுற்றறிக்கையின் படி அவர்களுக்கு ஒத்துழைப்பு வளங்கவேண்டிய அவசியம் கிடையாது. அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதேசமயம் P C R test ku பூரண ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

இலங்கையில் கோஸ்பட் சேனகா கொரணா தடுப்புசியை பயன்படுத்துவதற்காக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி

 கொரணாவினை நாட்டில் பல்வேறுபகுதிகளில் கட்டுப்படுத்தும் நோக்கும் பலருடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் இத் தடுப்புசியினை நாட்டுக்கு கொண்டுவரும் நோக்குடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனேகா தடுப்புசியினை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சவை அனுமதி வழங்கியுள்ளது. 


மேலும் இத்தடுப்புசியான எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வியாழன், 21 ஜனவரி, 2021

ஜனவரி 21, 2021

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொரணா நோயாளிக்கு சத்திரசிகிச்சை நிலையம் தயார் நிலையில்

 கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள தயார் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


கொவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு    தேவைப்படின்  சத்திர சிகிச்சைகள் மேற் கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எல்.எப்.ரஹ்மானின் ஆலோசனைக்கமைய   சத்திர்.சிகிச்சை நிபுணர் வைத்தியர் முஹம்மட் சமீமின் கண்கானிப்பின் கீழ்   இதற்காக ஒரு தனியான மருத்துவப்பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று Appendicitis யினால் பாதிக்கப்பட்டுள்ள  கொவிட்  19 நோயாளி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.


சனி, 16 ஜனவரி, 2021

ஜனவரி 16, 2021

திடிரென ஏற்படும் இரவு நேர இறப்பை தவிர்க்க வேண்டுமா?


 டாக்டர் ஆலோசனை வழங்குகிறார்.                       

வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ,  இரவில் எழுந்திருக்கும்  ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.                    

எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில்  திடீரென காலமானார். 

            "நேற்று, நான் அவருடன் பேசிக்  கொண்டிருந்தேன், நல்லாத்தானே  இருந்தார் அவர் ஏன் திடீரென்று  இறந்தார்?"

            காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச்  செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும்.

           நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது.

       "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்?

        நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், 

        மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

                 மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, 
அவை யாதெனில்?            
1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள். 
2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

          மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது,

          உங்கள் இதயம் பலவீனமடையாது, இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் 
 ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

                 இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

      உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம்.

Amudhan mahrshvarma .

திங்கள், 11 ஜனவரி, 2021

ஜனவரி 11, 2021

ரவுப் ஹக்கீமுடன் தொடர்புடைய பலர் சுய தனிமைப்படுத்தலில்



 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான காரணத்தினால் அவருடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியம் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருவதுடன் ரவுப் ஹக்கிமுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களை சுய தனிமைப்படுது்தலுக்கு உட்படுத்த சி.சி..ரிவி காட்சிகளை பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வியாழன், 7 ஜனவரி, 2021

ஜனவரி 07, 2021

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

 மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*


S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS





ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

 

*SMILE (சிரிக்க சொல்வது),*

*TALK (பேச சொல்வது),*

*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

 

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

 

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

 

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

 

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

 

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!


புதன், 6 ஜனவரி, 2021

ஜனவரி 06, 2021

நபி ( ஸல் ) அவர்கள் விரும்பி சாப்பிட்ட மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!



1. கருஞ்சீரகம்

2. பார்லி

3. பேரித்தம் பழம்

4. தேன்

5. பால்

6. அத்தி பழம்

7. தர்பூசணி பழம்

8. காளான்

9. வினிகர்

10. திராட்சை

11. ஆலிவ் எண்ணெயை

12. மாதுளை பழம்

13.சுரைக்காய்


இதில் ஒவ்வொன்றுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு..!

ஒரு வரியில் விளக்கம்

1. கருஞ்சீரகம் - அனைத்து நோய்களுக்கும் நிவாரணம்

2. பார்லி  - காய்ச்சலுக்கு நிவாரணம்

3. பேரித்தம் பழம் - இரும்பு சத்து அதிகம் உள்ளது

4. தேன் - வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம்

5. பால் - மூளைக்கும் , கண் பார்வைக்கும்

6. அத்தி பழம் - மூல நோய்க்கு மருந்து

7. தர்பூசணி - ஆண்மை பெருக்கி

8. காளான் - கண் பார்வைக்கும் , பக்க வாதத்திற்கும் சிறந்தது

9. வினிகர் - அஜீரண கோளாறுகளை நீக்கும்

10. திராட்சை - இதன் விதை புற்றுநோய் க்கு சிறந்த மருந்து

11. ஆலிவ் - சருமத்திற்கும் , கூந்தலுக்கும்

12. மாதுளை - இதய பாதுகாப்பிற்கு...

திங்கள், 4 ஜனவரி, 2021

ஜனவரி 04, 2021

Antigen test, RT-PCR சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய சொற் பதங்கள்

 உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி RT-PCR செய்வதற்கு முடியாத நிலை இருக்குமாயின் எந்த நோய் அறிகுறிகளும் இல்லாதவர்களுக்கு Antigen test செய்வதற்கு பரிந்துரை செய்யப்படவில்லை காரணம் Antigen test இறுதியானதல்ல, இதில் நோய் தொற்று அற்றவர்களுக்கு தொற்று உள்ளது என்று வரும் பட்சத்தில் அவர்கள் கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கி வேறு முடிவுகளில் கொண்டு சேர்க்கும் என்பதற்காக.



இங்கு இவர்கள் Antigen test, RT-PCR சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய சொற் பதங்கள்

    1.Sensitivity

    2.Specificity

    3.True positive

    4.True negative

    5.False positive

    6.False negative

    7.Positive Predictive Value (PPV)

    8.Negative Predictive Value (NPV)

    9.High Prevalence Area (HPA)

    10.Low Prevalence Area (LPA)

    11.Low Pretest Probability

    12.Moderate Pretest Probability

    13.High Pretest Probability

    14.Symptomatic and Asymptomatic patients and it's significances

இது சம்பந்தமான விளக்கங்களை இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் தருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

Dr. Anpudeen Yoonus Lebbe

ஜனவரி 04, 2021

ஒவ்வொரு மதத்தவரும் எவ்வாறு தங்களுடைய கைலாகு மேற்கொள்ள வேண்டும் COVID-19

 


உலக சுகாதார ஸ்தாபனம் ஒவ்வொரு மதம் சார்ந்த அடிப்படையில்  கொவிட் - 19 காலத்தில் எவ்வாறு தங்களின் கைலாகினை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய கானோளியை வெளியிட்டு வைத்துள்ளது அதனை பார்த்து நாம் எவ்வாறு மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வோம். 

இந்த கானொளியைப் பார்த்து நாம் பழகிக்கொள்வோம்.



ஜனவரி 04, 2021

புற்று நோய் பற்றி யாம் பயப்படத் தேவையில்லை

 புற்றுநோய் என்பது ஒரு நோய் அல்ல, மயக்க மருந்து! ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஓஷ் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் புற்றுநோயியல் நிபுணர். புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர் என்று குப்தா பிரசாத் ரெட்டி (பி.வி) கூறுகிறார்.



 அவரைப் பொறுத்தவரை, இரண்டு முறைகளை மட்டுமே பின்பற்றினால் புற்றுநோயை அகற்ற முடியும். முறைகள்: -

 1_ முதலில் அனைத்து வகையான சர்க்கரை உணவையும் விட்டு விடுங்கள். ஏனெனில், உங்கள் உடலில் சர்க்கரை கிடைக்காவிட்டால், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ இறந்து விடும்.

 2. பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை கலக்கவும். இந்த எலுமிச்சையுடன் கலந்த வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் காலையில் 3 மணிக்கு சாப்பிடுவதற்கு முன் குடிக்கவும். புற்றுநோய் நீங்கும்.

 மேரிலாந்துமருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், இது கீமோதெரபியை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டது.

 3. தினமும் காலையிலும் இரவிலும் மூன்று தேக்கரண்டி கரிம தேங்காய் எண்ணெயை சாப்பிட்டால் அது புற்றுநோயை குணப்படுத்தும்.

 நீரிழிவுநோயைத் தவிர்த்து பின்வரும் இரண்டு சிகிச்சையில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். புற்றுநோயால் உங்களை காயப்படுத்த முடியாது. இருப்பினும், அலட்சியம் அல்லது அலட்சியம் என்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.

 புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்பதை நினைவில் கொள்க. குப்தா பிரசாத் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில் இந்த தகவல்களை பரப்புகிறார்.

 அனைவருக்கும் தெரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்க தகவல்களை பரப்ப வேண்டும் என்று கேட்டார்.

  அவர், "நான் என் வேலையைச் செய்தேன். இப்போது உங்கள் வேலையைச் செய்து உங்களைச் சுற்றியுள்ளவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றுங்கள்! புற்றுநோயியல் நிபுணர் குப்தா பிரசாத் ரெட்டி ஒரு மருத்துவர் மட்டுமல்ல, ஒரு மேசியாவும் கூட!"