பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் DR.சுகுணன் அவர்களின் பணிப்புரையின் பேரில்
இன்று அதாவது (30-01-2021)9:00 மணி அளவில் மருதமுனை வைத்திய சாலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR அஸ்மி அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இன்று கொவிட் 19 தடுப்பூசி போடுகின்ற நிகழ்வு இடம் பெற்றதுஇந்த நிகழ்விலன் போது முதல் தடுப்பு ஊசியினை DR.MOH.Asmee அவர்கள் போட்டுக்கொண்டார்கள் அதனைத் தொடர்ந்து அனைத்துப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தாதிமார்கள் ஏனைய ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசியினைச் செலுத்திக் கொண்டார்கள். அத்துடன் பொதுமக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்பதற்காகவும் மக்களை விழிப்பூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுக்கு உதவியவர்கள்Dr.சுகுணன் (பிராந்திய சுகாதார அதிகாரி)DR.ஆரிப் (பிராந்திய தொற்று நோய்கள் அதிகாரி) அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்கள் வைத்திய அதிகாரிdr.அஸ்மீ அவர்கள்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக