Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

இந்தியாவின் 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!


இலங்கைக்கு வந்து சோ்ந்தன இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...!!

இந்தியாவில் இருந்து 500,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு வந்தன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு மருத்துவமனையில் தொடங்கும்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஆறு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் மீது தடுப்பூசி திட்டம் நாளை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!

இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!



கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ஹோமகாமா அடிப்படை மருத்துவமனை, கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை மற்றும் அங்கோடாவில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐடிஎச்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்தார். 

இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் ஹேமந்தா ஹெரத் மேலும் தெரிவித்தார்.

திங்கள், 25 ஜனவரி, 2021

ஜனவரி 25, 2021

மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த படித்தவர்கள்

மகள்களை நரபலி கொடுத்து விட்டு மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த  பேராசிய தம்பதி பெற்றோரால் ஆந்திராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி வசித்து வருகின்றனர். புருஷோத்தம் நாயுடு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரின் மனைவி பத்மஜா பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களின் மூத்த மகள் அலேக்யா ( வயது 27) MBA படித்துவிட்டு போபாலில் வேலை பார்த்து வந்துள்ளர். இரண்டாவது மகள் சாய் திவ்யா (22) ஏ. ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பெற்றோருடன் தங்கள் வீட்டில் மகள்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி புருசோத்தம் அவரின் மனைவி பத்மஜா ஆகியோர்வழிபட்டு வந்துள்ளனர். நேற்றிரவு வீட்டில் பூஜைகள் செய்த பெற்றோர் முதலில் சாய் திவ்யாவை நிர்வாணப்படுத்தி மொட்டையடித்தனர். பிறகு மூத்த மகள் அலெக்கியாவும்  நிர்வாணப்படுத்தி மொட்டையடித்துள்ளனர். பிறகு, உடற்பயிற்சி செய்யும் சாதனமான டம்பிள்ஸ் மூலம்  இவருவரையும் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்களின் உடல்களுக்கு பூஜைகள் செய்துள்ளனர். வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  DSP. ரவி மனோகராச்சாரி கூறுகையில் புருஷேத்தம் நாயுடு வீட்டுக்கு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். அப்போது, வீட்டுக்குள் மகள்கள் இருவரும் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பெற்றோரிடத்தில் சம்பவம் குறித்து விசாரித்த போது, ஒரு இரவு பொறுத்திருங்கள் எங்கள் மகள்கள் உயிர்த்தெழுந்து வந்து விடுவார்கள் ' என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். மேலும், போலீஸாரையும் வீட்டுக்குள் விட மறுத்துள்ளனர். பின்னர், உள்ளே புகுந்த போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த  படித்தவர்கள்


இந்த துயர சம்பவம் குறித்து சித்தூர் DSP மனோகராச்சாரி கூறுகையில், புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். தங்கள் மகள்களையும் நன்கு படிக்க வைத்து வந்துள்ளனர். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்று தெரிகிறது.  அதீத பக்தியின் மூலம் அதிசயம் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்.  இதனால், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆயுள் கூடும் என்று நம்புவதாக கூறியுள்ளனர். தங்கள் மகள் மீண்டும் இறக்கவில்லை. ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

வெள்ளி, 22 ஜனவரி, 2021

ஜனவரி 22, 2021

இலங்கை கடற்படைப்படகில் மோதுண்டு இந்திய மீனவர்களின் உயிரழிப்புக்கு இந்தியா தனது கண்டத்தை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழைமை சட்டவிரோதமான முறையில் இலங்கையில் கடற்பரப்பில் மீன்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரே கொள்ளப்பட்டவராகும். இதற்கு இந்திய உயிரழந்த மீனவர்கள் தொடர்பில் இலங்கைக்கான தூதுவரை அழைத்து தனது கவலையை  இந்தியா தெரிவித்துள்ளது.

இதே வேளை இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை தடுக்கும் நோக்கும் சென்ற வேளை அவர்கள் பயணித்த படகு சேதமடைந்து இந்த உயிரழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

ஜனவரி 17, 2021

இந்தியாவில் முதல் இஸ்லாமிய நரம்பியல் நிபுணர்

 அபிபா மரியம் இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக வெளியாகியுள்ளார்.



 மரியம் தனது உருது மொழி உருது நடுத்தரப் பள்ளியில் படிக்கும்போதே பத்தாம் வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 

இஸ்லாத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு இஸ்லாமிய சமூகம் கல்வி முக்கியத்துவம் கொடுத்தது போல நாமும் நாட்களை நோக்கி நகர்வதே முயற்சியை தரும் என அவர் தெரிவிக்கின்றார்.


கல்வியைத் தேடி பணியாற்றுமாறு தூண்டும் 60க்கும் மேற்பட்ட வசனங்கள் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அதுவரை முதல் வசனம் நபியே நீர் ஓதுவீராக என்று இறைவனின் கட்டளை உடன் தொடங்குகிறது கல்வியே நபி (ஸல்) அவர்கள் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி பார்க்காமல் மாறாக பயனுள்ள கல்வி என பிரித்தவர்கள்.