Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Woman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Woman லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜனவரி, 2021

ஜனவரி 16, 2021

இரண்டு மில்லியன் பணத்தை வென்று சாதனை படைத்துள்ளார்

 




சிரச தொலைகாட்சியில் லட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் 2 மில்லியன் பணத்தை வென்று சுக்ரா முனவ்வர் சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்ச்சி யானது சிரச தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆனால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இவர் காலிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதன், 6 ஜனவரி, 2021

ஜனவரி 06, 2021

இந்த நூண்றாண்டிலும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு நடக்கும் சுவையான அதட்டல்!


திருமணத்திற்கு பிறகு

வேலை வேண்டாம் என்றார்

விட்டுவிட்டேன்!

நம்பரை மாற்ற வேண்டும் என்றார்

மாற்றிவிட்டேன்!

Facebook கூடாதென்றார்

நிறுத்தி விட்டேன்!

ஆண் நண்பர்கள் நட்பை

தொடரவேண்டாம் என்றார்

விட்டுவிட்டேன்!

லெக்கின் அணிந்தால்

கால் அளவு தெரியுமென்றார்

சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

Heels வைத்த செருப்பு

கூடாதென்றார்,

தூர ஒதுக்கினேன்!

ஜாக்கெட்டுக்கு தனியாய்

ஜன்னல் வேண்டாம் என்றார்

கழுத்துவரை மறைத்து

தைத்துக்கொண்டேன்!

உதட்டு சாயம் கூடாதென்றார்

ஒன்றும் போடாமல்

விட்டுவிட்டேன்!

பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,

பாலாடை தயிரோடு

நிறுத்திக்கொண்டேன்!

கொஞ்ச நாள் சந்தோஷமாய்

இருந்து அதன்பின் குழந்தை பற்றி

யோசிக்கலாம் என்றார்,

அதுவரை தவறாமல் மாதந்தோறும்

மாத்திரை தின்றேன்!

வாரத்தின் ஏழுநாளும்

அவருக்கு பிடித்ததே

சமைக்க வேண்டும்!

வாரக்கடைசியில் நண்பர்கள்

என்று நடுராத்திரி தான்

திரும்புவார்!

இரவு ஒரு மணிக்கு

Reached ? என்று

பெண் பெயரில் மெசேஜ்!

பொழுது விடிந்ததும்

யாரென்று கேட்டேன்,

Ex lover என்றார்!

விட்டுவிடச் சொன்னேன்,

முடியவில்லை என்றார்!

முயன்றால் முடியும்

துணைக்கு நானிருக்கிறேன்

என்றேன்!

நீயும் அவளும் ஒன்றா என்றார்,

வேறு வேறு தான்,

இது legal அது illegal என்றேன்!

அறைந்துவிட்டார்!

தூக்கம் போனது!

உங்களுக்காக எல்லாவற்றையும்

விட்டுவிட்டேன்,

எனக்காக இது ஒன்றை மட்டும்

விட்டுவிடுங்கள் என்றேன்!

முடியாது it's true love

என்றார்!

எனக்கும் கூட true love

இருந்தது என்றேன்!

மறைத்ததற்காக ஒரு வாரம்

அடித்தார்!

தாங்கிக்கொண்டேன்!

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்

இல்லை!

திரும்பவும் Facebook

open செய்தேன்!

திரும்பவும் lipstick போட்டேன்!

திரும்பவும் ஜாக்கெட்டுக்கு

ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!

பார்லர் பக்கம்

தலைவைத்து படுத்தேன்!

எனக்கு பிடித்ததையும்

சமைத்தேன்!

முகநூல் முழுவதும்

காதல் கவிதைகளாய்

எழுதினேன்!

திரும்பவும் வேலைக்கு போனேன்,

திரும்பும் போது லேட்டாக

வந்தேன்!

ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,

அவ்வப்போது weekend party என்று

வெளியே சென்றேன்!

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,

மொபைலுக்கும் laptop க்கும்

Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம்

வேலைகளில் முக்கியமான வேலை

என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு

தனக்கு மட்டுமே சொந்தம் என்று

திருடு போகாமல் காப்பாற்ற

லீவு நாட்களில் கூட அவர்

வெளியே போவதில்லை!

எப்படியாவது என் ex lover

கையும் களவுமாக பிடிக்கவேண்டும்

என்று என்னைச்சுற்றியே

வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால்

கண்டுபிடிக்க முடியாது,

காரணம் எந்த ex lover ம்

எனக்கு கிடையாது!

இல்லாத ஒருவனை தேடித்தேடியே

என் அருகாமையில் சுற்றுவார்,

அவளை விட்டு தூரம் வருவார்!

அவளை மறந்து என்னை

மட்டுமே நினைக்கும் வரை

எனக்கு ex lover வேண்டும்!

நீ யாரென்றே தெரியாது

என் அன்பு காதலனே,

But I love you darling!

ஜனவரி 06, 2021

முனிபா மஸாரி ஏன் இரும்புப் பெண்மணி என பாராட்டப்பட்டார்?

மனித வாழ்வில் எத்தனை சவால்கள் வந்தாலும் அதனை சாதனைகளாக முன்நிறுத்தி சாதிக்க ஆண்களால் மட்டும் தானா முடியும், பெண்களாலும் முடியும் என்பதை இந்த கட்டுரையை வாசித்தால் உங்களுக்கும் புரியும் 

தாய்மை அடைதலில் சிக்கல், விவாகரத்து, உடல் உறுப்பு செயலிழப்பு, புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் எதிர்கொண்டவர் முனிபா. பாகிஸ்தானின் ரஹிம்யர் கான் மாவட்டத்தில் 1987 மார்ச் 3-ம் தேதி பிறந்தவர். கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவருக்கு 18 வயதிலேயே திருமணமானது. 2007-ம் ஆண்டு கணவருடன் தன் சொந்த ஊருக்கு வரும்போதுதான், அந்தப் பயங்கர விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநர் எதிர்பாராத விதமாகத் தூங்கிவிட, அவர்களின் கார் கால்வாயில் வீழ்ந்தது. முனிபாவின் கணவர் அந்த விபத்திலிருந்து தப்பிவிட்டார். ஆனால், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முனிபாவை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார். நீண்ட நேரமாக உதவிக்கு யாருமின்றி காருக்குள் கிடந்தார் முனிபா. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஆட்கள் வந்தார்கள். ஆனால், அந்த நகரில் அம்புலன்ஸ் கிடைக்காததால் ஜீப்பிலேயே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சென்ற மருத்துவமனையிலோ முதலுதவி வசதிகள்கூட இல்லை. வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுங்கள் என்றார்கள். மீண்டும் பயணம். அடுத்த மருத்துவமனையில் முனிபாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், ''இவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார். சிகிச்சை அளிப்பதில் பயனில்லை'' என்றார்கள். மூன்றாவதாக, கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் முனிபா. ஒருவழியாக அங்கே சிகிச்சை ஆரம்பித்தது.

இதுகுறித்து ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசிய முனிபா, ''விபத்து நிகழ்ந்தபோது எனக்குக் கால்கள் இருப்பதையே என்னால் உணரமுடியவில்லை. எலும்புகள் எல்லாம் நொறுங்கிப்போனதாக நினைத்தேன். அதைவிட எனக்கு எல்லாமே என நம்பியிருந்த உறவு என்னை விட்டுப்போனது மிகுந்த வலியைத் தந்தது. நான் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள். எனது திருமணம் பெற்றோரின் ஆசைப்படி நடந்தது. பொதுவாகவே பெண்கள், தங்கள் திருமணம் பற்றிய கருத்துகளைப் பகிரும் சுதந்திரம் இங்கில்லை. ஆகையால், நானும் திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்தேன். எனது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லை. திருமணமான இரண்டு வருடத்தில் அந்த விபத்து நடந்தது. விபத்தில் தப்பிய கணவர், என்னைக் காப்பாற்றாமல் சென்றதற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன். தினமும் அவர் நலனுக்காகக் கடவுளை வேண்டுகிறேன். விபத்து நடந்த சில நாள்களிலேயே அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டதும் அவருக்கு எனது வாழ்த்துகளைக் குறுஞ்செய்தியாக அனுப்பினேன்" என்றபோது அந்தத் தன்னம்பிக்கை மனுசியின் கண்களில் சில துளி கண்ணீர்.



முனிபா மஸாரி

இரண்டு ஆண்டு தீவிர சிகிச்சை, மூன்று பெரிய அறுவை சிகிச்சை, இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகளைத் தாண்டி, இன்றைக்குப் பலருக்குத் தன்னம்பிக்கை உதாரணமாக முனிபா இருக்கக் காரணம், அவரின் தாயார். அவர்தான் முனிபாவை ஊக்குவித்துக்கொண்டே இருந்தார். முனிபாவால் இனி நடக்கவே முடியாது, குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட, அவருக்குக் கால்களாகச் செயல்பட்டவர் தாயார்தான்.

தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தான் தாயாக முடியாது என்று மருத்துவர்கள் கூறியதுதான் முனிபாவின் மிகப்பெரிய கவலை. 'இந்த உலகில் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் இருக்கிறார்களே. அவர்களில் ஒரு பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கலாமே' என்று நினைத்தார். ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவுசெய்து அதற்கான பதிவுகளையும் செய்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு அழைப்பு வந்தது. 'பாகிஸ்தானில் பிறந்து இரண்டே நாள்களான ஆண் குழந்தை ஒன்றுள்ளது. நீங்கள் விரும்பினால் அந்தப் பிள்ளையைத் தத்தெடுக்கலாம்' என்றார்கள். உடனடியாகச் சம்மதம் தெரிவித்து அந்தக் குழந்தையைத் தத்தெடுத்தார் முனிபா. எல்லா வசதிகளும் உள்ளவர்களே தத்தெடுப்புக்குத் தயங்கும்போது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சிக்கல்களை எதிர்கொள்ளும் முனிபா, ஒரு குழந்தையைத் தத்தெடுத்தது அவரின் தன்னம்பிக்கைக்கும் தாய்மை உணர்வுக்கும் சிறந்த உதாரணம்.

இன்று, 'முனிபாஸ் கேன்வாஸ் - உங்கள் சுவர்கள் வண்ணங்களை உடுத்தட்டும்' (Muniba's Canvas - Let your wall wear colors) என்கிற அறிவிப்புடன் இணையதளத்தில் அவருடைய ஓவியங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன. பல கண்காட்சிகளில் இவரின் ஓவியங்கள் விற்றுத் தீர்கின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முன்னாள் ஆளுநர் சல்மான் தசீர், முனிபாவின் ஆரம்ப காலத்து ஓவியங்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டார்.

உணவுச் சுகாதாரம், ஏழை மாணவர்களின் ஆரோக்கியம், கல்வி, பெண்களின் சுதந்திரம், மாடலிங், டிவி ஆங்கரிங், பாடகர் எனப் பல துறைகளில் கால் பதித்துள்ளார் முனிபா மஸாரி. ஐக்கிய நாடுகளின் அமைப்பு, 2015- ம் ஆண்டு அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கான நல்லெண்ணத் தூதராக முனிபாவை நியமித்தது. 2015-ம் ஆண்டு பிபிசி வெளியிட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் முனிபா மஸாரி இடம்பிடித்தார். போர்ப்ஸ் பத்திரிகையின் '30 அன்டர் 30' என்ற பட்டியலில் 2016-ம் ஆண்டு மீடியா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இடம்பிடித்தார்.

உலகப் பெண்களுக்கு உதாரணமாக வலம்வருகிறார் முனிபா மஸாரி!