Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

Economics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Economics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜனவரி, 2021

ஜனவரி 30, 2021

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

 'சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதியினை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை மைதானமும் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். கடந்த  40 வருடமாக எந்தவிதமான அபிவிருத்தியுமில்லாது காணப்பட்ட எமது அல்மர்ஜான் மைதானத்தை, பாடசாலையின் அதிபர் HM.அன்வர் அலி சேர் அவர்களின் வேண்டுகோளிற் கிணங்க, இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கு  அயராது முயற்சி செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ விமல வீர திசாநாயக்க அவர்களுக்கும்  மற்றும் அவரது இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சம்மாந்துறை இணைப்பாளருமான A.R.M.றபீக் (தௌபீக்) அவர்களுக்கும்எமது அல்மர்ஜான் தேசிய பாடசாலை சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி

சௌபாக்யா தெக்ம' எனும் அரசாங்க கொள்கைக்கிணங்க கிராமிய பாடசாலைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதி



 குறிப்பு:  ஏற்கனவே சகோதரர் ARM.றபீக் (தௌபீக்) அவர்களின் முயற்சியின் பலனாக சப்றிகம வேலைத்திட்டதின் கீழ் எமது பாடசாலைக்கு நீர்ப்பாசன மற்றும் மின்சார புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 9 மில்லியன்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 20 ஜனவரி, 2021

ஜனவரி 20, 2021

இலங்கையின் நாணயம் என்றுமில்லாதவாறு பாரிய வீழ்ச்சி

 இலங்கை நாணயத்தின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி விற்பனை விலையாக 198.26 ரூபாகவும், கொள்வனவு விலை 192.58 ரூபாவாகவும் காணப்படுகின்றது. இது இலங்கை வரலாற்றில் ரூபாவிற்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



வெள்ளி, 15 ஜனவரி, 2021

ஜனவரி 15, 2021

தெற்காசியாவில் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை இலங்கையில் !

 தெற்காசியாவிலேயே மிகப் பெரிய டயர் தொழிற்சாலை ஒன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை மூலம் நாட்டிற்கு பல வகையில் பொருளாதார ரீதியாக நன்மைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ நிறுவனம் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
 

ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில்த வளாகம் அமைந்துள்ளது. முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறன. 80% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுவதுடன், மீதமுள்ள 20% உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் தொகுதி உற்பத்தி இந்த மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சாலையின் நன்மைகளில், நாட்டின் ஏற்றுமதி சந்தை அபிவிருத்தி, ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் இறப்பர் செய்கையாளர்களுக்கு கிடைக்கும் அதிக விலைகள் ஆகியவை அடங்கும்

புதன், 13 ஜனவரி, 2021

ஜனவரி 13, 2021

கொரணா காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பாதிப்பு!

 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யும் வாகன இறக்குமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

ஜப்பானிய வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்  அத்துடன் கடந்த மார்ச் மாதத்துக்கு முன்னர் இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்ட வாகனங்களை மட்டுமாவது இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அறிக்கை ஒன்றின் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 நாட்டில் ஏற்பட்டுள்ள கொரணா அச்சத்தின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திங்கள், 4 ஜனவரி, 2021

ஜனவரி 04, 2021

தேங்காய் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி

 
இந்தியா, பிலிபைன்ஸ், வியட்நாமிலிருந்து தேங்காய் இறக்குமதி  தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில்தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய தொழிற்துறையினர்எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ளும் வகையில் தேங்காய் இறக்குமதிசெய்யப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்து அதிகாரசபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்தார்.

இந்தியா, பிலிபைன்ஸ் மற்றும் வியட்நாமிலிருந்து தேங்காய்இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் கூறினார்.

தேங்காய்தட்டுப்பாட்டிற்கு குறுங்கால தீர்வு வழங்கும் நோக்குடன்வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடுத்த வாரமளவில் நாட்டிற்கு தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என தெங்கு அபிவிருத்துஅதிகார சபையின் பணிப்பாளர் கூறினார்.

இதேவேளை, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தேவையான உலர்ந்ததேங்காய்களை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்தார்.

கடந்த வருடம் நிலவிய சீரற்றவானிலை காரணமாக தேங்காய் செய்கையில்வீழ்ச்சி ஏற்பட்டதுடன், நாட்டில் தேங்காய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால்70 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை தேங்காய்விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.