Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு

 இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அழைப்பு -  AFB இறந்தவர்களை எரிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்களோ தெரியாது ..?  

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள்  தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள , உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன என்றும் சிறுபான்மை மக்களை தொடர்ந்தும் துன்புறுத்தி வருவதாகவும், மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் முன்னைய அரசாங்கம் ஏற்படுத்திய முன்னேற்றகரமான அம்சங்களை ஜனாதிபதி ராஜபக்ச அரசாங்கம் பலவீனப்படுத்தியுள்ளது எனவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது எனவும்மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் முடிவடைந்த 37 வருட பிரிவினைவாத போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச செய்தி சேவைஇது தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும் ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு


மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளலாம என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சர்வதேச ஊடகம் குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல் போன்றவற்றை முன்னெடுக்குமாறு ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளளது
ஜனவரி 27, 2021

கொரணா ஊசி எப்படியானது! ஒரு அனுபவ பகிர்வு

 கொரனா வக்சீன்கள் இலங்கைக்குள் வர ஆரம்பித்துவிட்டன. 


அதை போடலாமா? போடப்போடாதா?
சைட் எபக்ட் வருமா? வராதா?

இந்திய வக்சீனை நம்பலாமா? நம்பப்போடாதா?

இஸ்லாத்துல ஆகுமா? ஆகாதா?

எனக்கு இங்கே தரப்பட்டது Pfizerஇன் வக்சீனாகும். இதனை கையின் தசையினுள்ளே செலுத்தினார்கள். போட்டு அடுத்த நாள் கையை தூக்கவே முடியாத அளவு வலித்தது. அது இரண்டு நாட்களில் சரியாகிவிட்டது. இந்த வலி அநேகமானோருக்கு இருந்தது.

ஹொஸ்பிட்டலில் இந்த வக்சீனை போட்டுக் கொண்டோருக்கான ஒரு வட்சப் குழுமத்தில், இந்த வக்சீனை போட்டுக் கொண்டவுடன் வரக் கூடிய, உடனடி வலி போன்றவற்றை குறிப்பிடச் சொல்லியிருந்தார்கள். அதனை தொடராக அவதானித்த வகையில், 
ஒரு சிலருக்கு போட்ட நாளில் காய்ச்சல் வருகிறது. உடல் அடித்துப் போட்டாப் போல் இருக்கிறது. அடுத்த நாள் சரியாகி விடுகிறது. அநேகமாக இது 40 வயதிலும் குறைந்தோரில் அவதானித்தேன்.

ஊசி போட்டு அடுத்த நாள் சிலருக்கு காய்ச்சல் தொடங்கி, சில நாட்கள் நீடித்தன.
ஒருவருக்கு கடும் இருமலுடன் இந்த கோவிட் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் வந்தது. ஆனால் அவருக்கு கோவிட் டெஸ்ட் நெகடிவ் ஆக வந்தது. அவரும் 4 நாட்களில் குணமடைந்தார்.

 நாங்கள் இப்போது இரண்டாவது ஊசிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

இனி இந்த இந்தியாட வக்சீனை நம்பலாமா என்ற கேள்விக்கு வருவோம். நமக்குத் தெரிவதெல்லாம் இந்த மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்லும் மோடியின் கூத்துக்களும் அவர்களின் கரசேவகர்களின் பகுத்தறிவில்லா விளக்கங்களும்தான். அதிலும் இந்தியாவிலுருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஹீலர்களின் தொல்லை ஒரு புறம். இதெல்லாம் சேர்ந்து இந்தியாவின் வக்சீன் என்றவுடன் ஒரு நம்பிக்கையின்மை வந்தாலும், இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி வெளியில் காட்டப்படுவதில்லை.
உலகில் உற்பத்தி செய்யப்படும் வக்சீன்களில் 60%ஆனவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா உலகுக்கு செய்த மிகப் பெரும் நன்மை ஒன்று இருக்கிறது- அதுதான் மருந்துப் பொருட்களின் மீதான காப்புரிமையின் சில சரத்துக்களை ஏற்க மறுத்து, மிகவும் மலிவான விலையில் மருந்துகளை உற்பத்தி செய்து, உலகின் அநேக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது. இதைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.
கொரணா ஊசி எப்படியானது!  ஒரு அனுபவ பகிர்வு



இந்த இந்தியாவின் Covishield எனப்படும் கொரனா வக்சீனானது UKஇல் தயாராகும் Oxford-AstraZeaneca vaccineஇன் பிரதியாகும். இதன் இரண்டு டோஸ்களையும் எடுப்பது கிட்டத்தட்ட 90% பாதுகாப்பளிக்கும் என ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிகிறது. எனது கருத்துப் படி இதனை எடுப்பது பாதுகாப்பானது. 

இனி எல்லாம் முடிய ஒரு கூட்டம் வரும், இஸ்லாத்தில் தொற்று நோயே இல்ல, அதால இந்த வக்சீன் எடுக்குறது எல்லாம் ஹராம் என்டுட்டு. அவங்களோட விளையாடியே நாம டயர்ட் ஆகாம, பல இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் படி, தொற்று நோய் உள்ளது என்றும், அதற்கு வக்சீன் எடுப்பது கடமை என்றும் பல பத்வாக்கள் எனது கைவசம் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக எழுதியும் உள்ளேன். இப்ப இந்த பதிவிலும் அவர்கள் வரலாம். அஞ்சாம் வகுப்பு பாஸ் பண்ணாதவர்களுக்கு, O/L பாடத்தை விளங்கப்படுத்த முனைவது எங்களது மடமை என நினைத்து அதை கடந்து போகலாம் என்றிருக்கிறேன்.

இன்னுமொரு கூட்டம் இருக்கிறது- ஹீலர்களின் வாரிசுகள். அவர்கள் இந்தியா இலங்கை மட்டுமல்ல, இங்கேயும் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு செய்தி வருவதால் மட்டும் அது உண்மையாகி விடாது என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன். வெள்ளக்காரன் எல்லாம் கெட்டிக்காரன், வெள்ளக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதெல்லாம், நான் இங்கே இருக்கும் இந்த சில மாதங்களிலேயே பொய்யாகிப் போகின.

கீழே நான் வக்சீன் எடுத்துக் கொண்டதற்கான பதிவையும், காத்தான்குடியைச் சேர்ந்த VOG Dr Siraj அவர்கள் சிங்கப்பூரில் இதனை பெற்றுக் கொள்வதையும் இணைத்துள்ளேன்.

இதையெல்லாம் தாண்டியும் நான் இதனையெல்லாம் எடுக்க மாட்டேன் என்றால், அது உங்களது சுய உரிமை என்பதை ஏற்பதோடு, இந்தியாவிலிருந்து வரும் கௌமாதாவின் அற்புத நோயாக்கி நீரை பருகுமாறு பரிந்துரை செய்கிறேன்.

Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics, DSICOT

இந்தப் பதிவு Dr Ahamed Nihaj முக நூலில் இருந்து...!!!!
ஜனவரி 27, 2021

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளது. 

    

தகனம் செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்ல - அரசு அறிவிப்பு

 

கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் உயிர்கள் கட்டாயமாக தகனம் செய்;யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். 
இந்நிலையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று பதில் அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கொரோணா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை கட்டாயம் எரிப்பதில் மிக பிடிவாதமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது எனலாம். 
மேலும், அமைச்சர் ரம்புக்கெவல தெரிவிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் அவர்  தெரிவித்தார். 

செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஜனவரி 26, 2021

இனவாதம் பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்

 ஆட்சியை பிடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்...!!!


இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன்...!!!

ஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று திங்கட்கிழமை (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சற்று ஆவேசப்பட்ட நிலையில் கருத்த வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Mp, ஐக்கிய தேசியக் கட்சி இனவாதமற்ற கட்சி,  சகல சமூகங்களையும் அரவணைத்து சென்ற கட்சி. அதனை விட மேம்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பயணம் அமைய வேண்டும்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர், இனவாதத்தை கையில் எடுத்திருப்பது போன்று தோன்றுகிறது. இதனை ஏற்க முடியாது. இனவாத்தை ஐக்கிய மக்கள் சக்தி கக்கினால், நான் கட்சியிலிருந்து வெளியேறுவேன். ஏற்கனவே  ஜனாதிபதி கோத்தபய, பிரதமர் மகிந்த ஆகியோரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுடன் இணையுமாறு எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்தனர்.

நான் இனவாதத்திற்கு எதிரானவன். ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஆட்சியை பிடிப்பதற்காக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள். எமக்கு கொள்கையே முக்கியம். அந்தக் கொள்கைக்காகவே நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளேன். இதனை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இனவாதம்  பேசி அரசியல் இலாபம் தேடவேண்டாம் - முஜிபுர் ரஹ்மான்



ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற, பாராளுமன்ற உறுப்பினர்களினால்  இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜனாசா எரிப்புக்கு எதிராக, சரத் பொன்சேக்கா பதிவிட்ட கருத்துதொன்றுக்காக அண்மையில் முஜிபுர் ரஹ்மான் பொன்சேக்காவிடம் நேரடியாக முரண்பட்டதும், சஜித் பிரேமதாசவிடம் இதுபற்றி முறையிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(Anzir)

திங்கள், 25 ஜனவரி, 2021

ஜனவரி 25, 2021

பட்டப்பகலில் நடந்த சினிமா பானி துப்பாக்கிச்சூடு

 பட்டப்பகலில் வந்து துப்பாகி சூடு நடத்தும் அளவுக்கு இலங்கை நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் இன்று(25) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எகடஉயன பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்டோவில் பயணித்த இருவரில் ஒருவர் மீது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த சினிமா பானி துப்பாக்கிச்சூடு


ஜனவரி 25, 2021

மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த படித்தவர்கள்

மகள்களை நரபலி கொடுத்து விட்டு மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த  பேராசிய தம்பதி பெற்றோரால் ஆந்திராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி வசித்து வருகின்றனர். புருஷோத்தம் நாயுடு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார். இவரின் மனைவி பத்மஜா பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இவர்களின் மூத்த மகள் அலேக்யா ( வயது 27) MBA படித்துவிட்டு போபாலில் வேலை பார்த்து வந்துள்ளர். இரண்டாவது மகள் சாய் திவ்யா (22) ஏ. ஆர் ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களாக பெற்றோருடன் தங்கள் வீட்டில் மகள்கள் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறி புருசோத்தம் அவரின் மனைவி பத்மஜா ஆகியோர்வழிபட்டு வந்துள்ளனர். நேற்றிரவு வீட்டில் பூஜைகள் செய்த பெற்றோர் முதலில் சாய் திவ்யாவை நிர்வாணப்படுத்தி மொட்டையடித்தனர். பிறகு மூத்த மகள் அலெக்கியாவும்  நிர்வாணப்படுத்தி மொட்டையடித்துள்ளனர். பிறகு, உடற்பயிற்சி செய்யும் சாதனமான டம்பிள்ஸ் மூலம்  இவருவரையும் அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்களின் உடல்களுக்கு பூஜைகள் செய்துள்ளனர். வீட்டிலிருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  DSP. ரவி மனோகராச்சாரி கூறுகையில் புருஷேத்தம் நாயுடு வீட்டுக்கு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார். அப்போது, வீட்டுக்குள் மகள்கள் இருவரும் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பெற்றோரிடத்தில் சம்பவம் குறித்து விசாரித்த போது, ஒரு இரவு பொறுத்திருங்கள் எங்கள் மகள்கள் உயிர்த்தெழுந்து வந்து விடுவார்கள் ' என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். மேலும், போலீஸாரையும் வீட்டுக்குள் விட மறுத்துள்ளனர். பின்னர், உள்ளே புகுந்த போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மூடநம்பிக்கையால் தனது இரண்டு பிள்ளைகளை பலியெடுத்த  படித்தவர்கள்


இந்த துயர சம்பவம் குறித்து சித்தூர் DSP மனோகராச்சாரி கூறுகையில், புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். தங்கள் மகள்களையும் நன்கு படிக்க வைத்து வந்துள்ளனர். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்று தெரிகிறது.  அதீத பக்தியின் மூலம் அதிசயம் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்.  இதனால், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆயுள் கூடும் என்று நம்புவதாக கூறியுள்ளனர். தங்கள் மகள் மீண்டும் இறக்கவில்லை. ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
ஜனவரி 25, 2021

இலங்கை சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரனா

 சுகாதார அமைச்சர் பவித்திராவுக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் ஹிக்கடுவ ஹோட்டலில் தனிமையில் உள்ளார் என்பதுடன் அவரது கணவரான  காஞ்ஞன ஜயரத்தின என்பவரயும்கொறோனா தொற்றி கொண்டது.

இலங்கை சுகாதார அமைச்சரின் கணவருக்கும் கொரனா