கொரனா வக்சீன்கள் இலங்கைக்குள் வர ஆரம்பித்துவிட்டன.
அதை போடலாமா? போடப்போடாதா?
சைட் எபக்ட் வருமா? வராதா?
இந்திய வக்சீனை நம்பலாமா? நம்பப்போடாதா?
இஸ்லாத்துல ஆகுமா? ஆகாதா?
எனக்கு இங்கே தரப்பட்டது Pfizerஇன் வக்சீனாகும். இதனை கையின் தசையினுள்ளே செலுத்தினார்கள். போட்டு அடுத்த நாள் கையை தூக்கவே முடியாத அளவு வலித்தது. அது இரண்டு நாட்களில் சரியாகிவிட்டது. இந்த வலி அநேகமானோருக்கு இருந்தது.
ஹொஸ்பிட்டலில் இந்த வக்சீனை போட்டுக் கொண்டோருக்கான ஒரு வட்சப் குழுமத்தில், இந்த வக்சீனை போட்டுக் கொண்டவுடன் வரக் கூடிய, உடனடி வலி போன்றவற்றை குறிப்பிடச் சொல்லியிருந்தார்கள். அதனை தொடராக அவதானித்த வகையில்,
ஒரு சிலருக்கு போட்ட நாளில் காய்ச்சல் வருகிறது. உடல் அடித்துப் போட்டாப் போல் இருக்கிறது. அடுத்த நாள் சரியாகி விடுகிறது. அநேகமாக இது 40 வயதிலும் குறைந்தோரில் அவதானித்தேன்.
ஊசி போட்டு அடுத்த நாள் சிலருக்கு காய்ச்சல் தொடங்கி, சில நாட்கள் நீடித்தன.
ஒருவருக்கு கடும் இருமலுடன் இந்த கோவிட் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் வந்தது. ஆனால் அவருக்கு கோவிட் டெஸ்ட் நெகடிவ் ஆக வந்தது. அவரும் 4 நாட்களில் குணமடைந்தார்.
நாங்கள் இப்போது இரண்டாவது ஊசிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
இனி இந்த இந்தியாட வக்சீனை நம்பலாமா என்ற கேள்விக்கு வருவோம். நமக்குத் தெரிவதெல்லாம் இந்த மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்லும் மோடியின் கூத்துக்களும் அவர்களின் கரசேவகர்களின் பகுத்தறிவில்லா விளக்கங்களும்தான். அதிலும் இந்தியாவிலுருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஹீலர்களின் தொல்லை ஒரு புறம். இதெல்லாம் சேர்ந்து இந்தியாவின் வக்சீன் என்றவுடன் ஒரு நம்பிக்கையின்மை வந்தாலும், இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி வெளியில் காட்டப்படுவதில்லை.
உலகில் உற்பத்தி செய்யப்படும் வக்சீன்களில் 60%ஆனவை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியா உலகுக்கு செய்த மிகப் பெரும் நன்மை ஒன்று இருக்கிறது- அதுதான் மருந்துப் பொருட்களின் மீதான காப்புரிமையின் சில சரத்துக்களை ஏற்க மறுத்து, மிகவும் மலிவான விலையில் மருந்துகளை உற்பத்தி செய்து, உலகின் அநேக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது. இதைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.
இந்த இந்தியாவின் Covishield எனப்படும் கொரனா வக்சீனானது UKஇல் தயாராகும் Oxford-AstraZeaneca vaccineஇன் பிரதியாகும். இதன் இரண்டு டோஸ்களையும் எடுப்பது கிட்டத்தட்ட 90% பாதுகாப்பளிக்கும் என ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிகிறது. எனது கருத்துப் படி இதனை எடுப்பது பாதுகாப்பானது.
இனி எல்லாம் முடிய ஒரு கூட்டம் வரும், இஸ்லாத்தில் தொற்று நோயே இல்ல, அதால இந்த வக்சீன் எடுக்குறது எல்லாம் ஹராம் என்டுட்டு. அவங்களோட விளையாடியே நாம டயர்ட் ஆகாம, பல இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் படி, தொற்று நோய் உள்ளது என்றும், அதற்கு வக்சீன் எடுப்பது கடமை என்றும் பல பத்வாக்கள் எனது கைவசம் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக எழுதியும் உள்ளேன். இப்ப இந்த பதிவிலும் அவர்கள் வரலாம். அஞ்சாம் வகுப்பு பாஸ் பண்ணாதவர்களுக்கு, O/L பாடத்தை விளங்கப்படுத்த முனைவது எங்களது மடமை என நினைத்து அதை கடந்து போகலாம் என்றிருக்கிறேன்.
இன்னுமொரு கூட்டம் இருக்கிறது- ஹீலர்களின் வாரிசுகள். அவர்கள் இந்தியா இலங்கை மட்டுமல்ல, இங்கேயும் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு செய்தி வருவதால் மட்டும் அது உண்மையாகி விடாது என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன். வெள்ளக்காரன் எல்லாம் கெட்டிக்காரன், வெள்ளக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதெல்லாம், நான் இங்கே இருக்கும் இந்த சில மாதங்களிலேயே பொய்யாகிப் போகின.
கீழே நான் வக்சீன் எடுத்துக் கொண்டதற்கான பதிவையும், காத்தான்குடியைச் சேர்ந்த VOG Dr Siraj அவர்கள் சிங்கப்பூரில் இதனை பெற்றுக் கொள்வதையும் இணைத்துள்ளேன்.
இதையெல்லாம் தாண்டியும் நான் இதனையெல்லாம் எடுக்க மாட்டேன் என்றால், அது உங்களது சுய உரிமை என்பதை ஏற்பதோடு, இந்தியாவிலிருந்து வரும் கௌமாதாவின் அற்புத நோயாக்கி நீரை பருகுமாறு பரிந்துரை செய்கிறேன்.
Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics, DSICOT
இந்தப் பதிவு Dr Ahamed Nihaj முக நூலில் இருந்து...!!!!




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக