Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

சனி, 23 ஜனவரி, 2021

ஜனவரி 23, 2021

பிளாஸ்டிக் , பொலித்தீன் பொருட்கள் மீதான தடைக்கான தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்யும் தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டபொலித்தீன்மற்றும்பிளாஸ்டிக்உற்பத்தியில்ஈடுபடுபவர்களுக்குநிவாரணம்மற்றும்இதரநடவடிக்கைகளுக்கானகாலஅவகாசம்வழங்கவேண்டும்எனஅமைச்சரவைமட்டத்தில்தீர்மானம்எடுக்கப்பட்டது. இதற்கமையஇரண்டுமாதகாலஅவகாசம்வழங்கப்பட்டுள்ளது.

 


அதன் பிரகாரம்வாசனைத்திரவியங்கள்மற்றும்நீராகாரபொருட்கள்அடைக்கப்பட்டசிறுபொலித்தீன்பக்கட், காற்றுநிரப்பப்பட்டபிளாஸ்டிக்உற்பத்தியிலானவிளையாட்டுபொருட்கள், மைக்ரோன்20 இற்குகுறைவானலஞ்சீட்ஆகியவைஉற்பத்திசெய்யவும், பகிர்ந்தளிக்கவும்விதிக்கப்பட்டுள்ளதடைஏப்ரல்மாதம்முதல்வாரத்தில்இருந்துஅமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனவரி 23, 2021

ஸ்பெனைச் டென்னிஸ் வீராங்களை சேர்ந்த பவ்லாக்கு கொரான தொற்று

மேற்படி வீராங்கனை  தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்பில் பல விமர்சனைங்களையும் குறைகளையும் தெரிவித்த ஒருவருக்கே இப்போது கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, 

 அவுஸ்திரேலிய பகிரங்க டென் னிஸ் போட்டியில் கலந்துகொள்ள வந்த 72 வீரர்களில் இதுவரை 4 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உடல்நலம் சரியில்லாததால் நேற்றுமுன்தினம் மெல்பேபர்னில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்துதல் மிக முக்கியமானது, அதைக் குறைகூறியதற்கு மன்னிக்கவும் என்று 23 வயது படோஸா டுவிட்டர் பதிவு மூலம் வருத்தம் தெரிவித்தார்.

 அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கவிருக்கும் டென்னிஸ் பகிரங்க போட்டியில் கலந்துகொள்ள வந்த வீராங்கனை ஒருவருக்கு கொரோன நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 போட்டி திட்டமிட்டபடி பெப்ர வரி 8 ஆம் திகதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பி க்கை தெரிவித்துள்ளனர்.



ஜனவரி 23, 2021

கொரோணா கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக ஜப்பான் கடுமையான தண்டனை விதித்துள்ளது.


மேற்படி சட்டமூலம் ஜப்பான் அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சட்டமூலம் அடுத்த வார நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் எதிர்க்கட்சியினர் சட்டமூலத்தின் சில அம்சங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் கடுமையான தண்டனைகளை விதிக்கும் மசோதா அமைச்சரவையின் அனுமதி பெற்றுள்ளது.

 

ஏற்கனவே டோக்கியோ உள்ளிட்ட சில இடங்களில் நெருக்கடி நிலை நடப்பிலுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த சட்டமூலத்தின் மூலம், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மீறினால் ஒரு வருடம் தண்டனையும் 10 ஆயிரம் டொலர் தண்டமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

 


நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர மறுத்தால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

 

ஜப்பானில் இதுவரை 92 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் நாளாந்தம் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 23, 2021

ரஞ்சன் சிறைசென்றது ஒரு அரசியல் ரீதியான பலிவாங்களா? -உதயன் கம்பல

 

'பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுமேயானால், ரஞ்சன் ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அக்கட்சியினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார். அமைச்சர் உதய கம்மன்பில எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.

 


கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து வெளியிட்டதுடன், ஹரீன் பெர்னாண்டோவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடமும் பொலிஸ் மாஅதிபரிடமும் கேட்டிருக்கிறாரே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 பதில்: -செய்வதற்க எதுவும் இல்லாததால் எதிர்க் கட்சியினர் இந்த விடயத்தை வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர். எதிர்க் கட்சியினர் கூறுவதைப் போல் ஜனாதிபதி அவரது பேச்சில் ஹரின் பெர்னாண்டோவை அச்சுறுத்தவில்லை. செய்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் அடிப்படையற்ற இந்த விடயத்தை வைத்து இல்லாத விடயங்களை உருவாக்க எதிர்க் கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

 

கே: ரஞ்சன் ராமநாயக்கவின் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ஒரு அரசியல் பழிவாங்கல் முயற்சியாகக் காட்ட எதிர்க் கட்சியினர் முனைகின்றனர். இது பற்றிய உஙகள் கருத்து என்ன?

 பதில்: - ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் ஒரு அரசியல் பழி வாங்கல் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறுமாக இருந்தால், ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விசாரித்த நீதிபதிகள் அப்போதைய அரசியலமைப்பு சபையின் சிபாரிசின் பேரில்அவர்களது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தால் அதற்கான பொறுப்பை எதிர்க் கட்சியினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த தீர்ப்பின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வந்தார். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கு அவர் வேண்டுமென்றே முயற்சித்தார். எனவே இவ்வாறான தீர்ப்பு அவருக்கு ஏற்றதாகும்.

 கே: -இலங்கைக்கு கொவிட்19 தடுப்பு மருந்துகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய மற்றும் சீன பிரதமர்களுக்கு கடிதமெழுதியுள்ளார். இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பான தற்போதைய நிலை என்ன?

 

பதில்: -எமது மக்களின் உயிர்களை பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் வரை அரசாங்கம் இப்போது பொறுமை காத்து வருகிறது. மேற்படி நட்பு நாடுகள் இரண்டுக்கும் கடிதம் எழுதியுள்ள எங்கள் ஜனாதிபதி, இலங்கைக்கு விரைவில் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதை விரைவுபடுத்த தனது பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார்.

 

ஏதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என நம்பலாம்.

 

கே: பலம் மிக்க எதிர்க் கட்சி இல்லாமை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -பலம் மிக்க எதிர்க் கட்சியானது பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகவும் இருக்க வேண்டும். பலம் மிக்க எதிர்க் கட்சி பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அது அது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். 1977 இல் எதிர்க் கட்சியில் 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். எனவே இது ஒன்றும் புது விடயமல்ல. எவ்வாறெனினும் அரசாங்கம் தவறான வழியில் சென்றால் அதனைச் சுட்டிக் காட்ட பலம் மிக்க எதிர்க் கட்சி எமக்குத் தேவைப்படுகின்றது.

 

கே: கொவிட் 19 நடவடிக்கைகளை கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையானது நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் கட்சி கூறுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

 பதில்: -இது ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஏனெனில் சுகாதார அதிகாரிகளையோ நிர்வாக அதிகாரிகளையோ இராணுவம் மாற்றவில்லை. நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்கள் உள்ளன. தனிமைப்படுத்தல் அல்லது நிவாரண பங்கீடு ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உள்ளூர் தலைவர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ள வேண்டும்.

  

இதனால்தான் இராணுவத் தளபதி 25 மேஜர் ஜெனரல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

 

எனவே மாவட்ட செயலாளர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொள்ள முடியும்.

 

எதிர்க்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு இராணுவ மயப்படுத்தலும் இல்லை. மாவட்ட மட்டத்தில் 25 தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

 கே: மேல் மாகாண சபை முன்னாள் அமைச்சர் என்ற வகையில் மாகாண சபை முறைமையை தொடர்வது நியாயபூர்வமானதா? அது பொதுமக்கள் பணத்தை விரயமாக்கும் ஒரு செயல் என்று சிலர் கூறுகிறார்களே?

 

பதில்: -கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை தேவையற்றது என்று முன்னைய நல்லாட்சி அரசு கருதியது. அதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேல் பின்போட்டார்கள். நாம் இப்போது புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருகிறோம். அது தொடர்பாக மக்கள் அபிப்பிராயம் கோரப்படும். மாகாண சபைகள் தேவையா அல்லது வேறு முறை தேவையா என்பதை மக்கள் அப்போது தீர்மானிக்கலாம்.

 கே: அரசாங்கம் தற்போது தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக மகாசங்கத்தின் ஒரு பகுதியினர் பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை உள்ளதா?

 

பதில்: - தற்போதைய நிர்வாகத்தை அமைப்பதில் மகாசங்கத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த மகாசங்கத்தினருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேவேளை அவர்கள் சொல்வதைக் கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மகாசங்கத்தினர் அவர்களது பாரம்பரிய பங்களிப்பையே நிறைவேற்றுகின்றனர். அது அவர்களது உரிமை. எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

 கே: நாட்டில் நாளாந்தம் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு கதவுகளை திறந்து விடுவது சரியென்று நினைக்கிறீர்களா?

 

பதில்: -நாங்கள் சுமார் ஒரு வருட காலமாக சுற்றுலாத் துறையினருக்கு கதவை அடைத்து வைத்திருந்தோம். மிகவும் தேவையான வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதற்கு சுற்றுலாத்துறை முக்கியமாகும். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் பயணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய முறையைப் பயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பயணம் செய்ய வழி செய்திருக்கிறோம். நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு கொவிட் 19 தொற்றாளர்கள் இருப்பது உண்மைதான். அந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்பினால் நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்?

 கே: வடபகுதி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரிவினைவாத எண்ணங்களில் இருந்து மாறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

பதில்: வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.

 

உதித்த குமாரசிங்க

தமிழில்: என். ராமலிங்கம்

நன்றி  - தினகரன்

ஜனவரி 23, 2021

சுகாதார அமைச்சருக்கு கொரணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சுகாதார அமைச்சர் பவித்திர வண்ணியராச்சிக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று இது தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிழலையில் சுகாதார அமைச்சருக்கும் தற்போது தொற்றுயுள்ளாராக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்கு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் அவருக்கு கொரணா தொற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவரும் கேகாலை தம்மிக்கையின் பாணியினை அருந்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர்பவித்ராவன்னியராச்சிக்குகொரோனாதொற்றுஏற்பட்டுள்ளதாகசுகாதாரஅமைச்சுஉறுதிப்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில்அமைச்சர்பவித்ராவன்னியாரச்சிஇலங்கையில்கொவிட்-19 தொற்றுக்குள்ளான5ஆவதுபாராளுமன்றஉறுப்பினராவார்.

 

கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்டசுகாதாரஅமைச்சர்பவித்ராவன்னியராச்சிதற்போதுஹிக்கடுவவில்உள்ளசிகிச்சைநிலையமொன்றில்சிகிச்சைக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்.

 

இதேவேளை பவித்ராவன்னியாரச்சிநேற்றையதினம்(22) ஸ்ரீஜயவர்தனபுரமருத்துவமனையில்நடைபெற்றநிகழ்வொன்றில்பங்கேற்றிந்ததோடு, இந்நிகழ்வில்அவருடன்சுகாதாரசேவைகள்பணிப்பாளர்நாயகம்அசேலகுணவர்தனஉள்ளிட்டசுகாதாரத்துறையின்உயர்அதிகாரிகளும்கலந்துகொண்டிருந்தனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 


அத்துடன், (21.01.2021) நெலும்மாவத்தையில்ஶ்ரீலங்காபொதுஜனபெரமுனகட்சிஅலுவலகத்தில்இடம்பெற்றநிகழ்வொன்றிலும்அமைச்சர்பவித்ராபங்கேற்றிருந்தார்.

 

அந்த வகையில், இதற்குமுன்னர்இராஜாங்கஅமைச்சர்தயாசிறிஜயசேகர, ரஊப்ஹக்கீம்எம்.பி., அமைச்சர்வாசுதேவநாணயக்கார, இராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தஆகியஐந்துபாராளுமன்றஉறுப்பினர்களுக்குகொரோனாவைரஸ்தொற்றுஏற்பட்டிருப்பதுகண்டறியப்பட்டிருந்தது. இதில்தயாசிறிஜயசேகரகுணமடைந்துதற்போதுவீட்டில்சுயதனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்என்பதும்குறிப்பிடத்தக்கது.

 

அமைச்சர் பவித்ராவன்னியாரச்சிநிகழ்வொன்றின்போது, கேகாலையைச்சேர்ந்தஆயுர்வேதவைத்தியர்எனதம்மைஅடையாளப்படுத்திவரும்தம்மிகபண்டாரதயாரித்த, கொரோனவைரஸுக்குஎதிரானநோயெதிர்ப்புசக்தியைகொண்டபாணியைஅருந்தியிருந்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

இப்பாணியை அருந்தியஇராஜாங்கஅமைச்சர்பியல்நிஷாந்தவும்கொரோனாதொற்றுக்குள்ளானமைகுறிப்பிடத்தக்கது.

 

இதற்கு முன்னர்பாராளுமன்றத்தில்மேற்கொண்டPCR சோதனையில்அங்குகடமையாற்றும்ஒன்பதுபேருக்குகொரோனாவைரஸ்தொற்றுஇருப்பதுகண்டறியப்பட்டிருந்தது.

ஜனவரி 23, 2021

உலகளாவிய ACCA பரீட்சையில் பர்ஹான் அகமட் முதலிடம்

கொலியோயாவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பல்கலைக்கழக மாணவருவமான பர்ஹான் அகமட் என்பவர் சர்வதேச அளவில் பிரபலமான ACCA பரீட்சையில் தனது திறமையைக்காட்டி முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.  இவரின் எதிர்காலம் சிறக்க எமது இணைத்தளத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

 


ACCA சர்வதேச தகைமை பரீட்சையில் உலக அளவில் முதலிடம் பெற்றார் Farhan Ahamed.

Farhan Ahmed, An undergraduate of University of Colombo from Galiyoya has become the world prize winner (World No. 01) for the Subject of FM in ACCA skills level examination happened in December 2020

Our heartiest congratulations to you Farhan Ahmed!

ஜனவரி 23, 2021

மிக முக்கிய அறிவித்தலின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தல்

 Deen Fairoos Journalist

இப் பகிரங்க அறிவித்தல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்திற்கான முறைப்பாடுகளை முன்வைக்கும் கால எல்லை எதிர்வரும் 31/01/2021 உடன் முடிவடைய இருந்தது.

கடந்த திங்கட்கிழமை ஆளுநரை சந்தித்த போது இவ்விடயம் தொடர்பிலும் பேசினோம்.

கொரோனா காரணமாக அதிக மக்கள் விண்ணப்பிக்கவில்லை.

விண்ணப்ப முடிவு காலத்தை மேலும்  நீடிக்குமாறு கோரினோம்.

எதிர் வரும் பெப்ரவரி 2021 இறுதி வரை அதாவது மேலும்  ஒரு மாதம்  காலத்தை நீடிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

விடயம் இதுதான்

ஆளுநரின் அறிவித்தலை அப்படியே தருகின்றேன்.

பொது அறிவித்தல்

கடந்த நான்கு தசாப்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட ஏதாகியினும் ஒரு பிரிவினைவாத நடவடிக்கை அல்லது முறையற்ற  செயற்பாடுகள் அல்லது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான தனி நபர்கள் அல்லது குழுக்களின் கவனத்தை  ஈர்க்கும்  பொது அறிவித்தல்

மேற்சொன்னதே விடயத்தின் தலைப்பு

இனி விபரம் வருமாறு:--

கிழக்கு மாகாண மக்கள்  மத்தியில்  நல்லிணக்கம் மற்றும்  சகவாழ்வினை

உறுதிப்படுத்தும் நோக்குடன் அதனோடு இணைந்த இடைநேர்விளைவான விடயங்களை  எடுத்துரைக்கும் வகையிலும் கிழக்கு மாகாணத்தினுள்  ஏற்பட்டுள்ள அனைத்து  வகையான சமூக அநீதிகள் பற்றிய  முறைப்பாடுகள்,கோரிக்கைகள் மற்றும்  மேன்முறையீடுகளைப் பொதுமக்களிடமிருந்து பெற்று அவற்றின் ஆழத்தினை விளங்கி,ஆய்வு செய்து பொருத்தமான  பரிந்துரைகளை வழங்கவென கிழக்கு  மாகாண கெளரவ ஆளுநர் அவர்கள் நிபுணர் குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளார்.

தமக்கு நேர்ந்த ஏதேனும்  சமூக அநீதிகளுக்காக நீதியை எதிர்பார்க்கும்  எந்த  ஒரு தனி நபரும் அல்லது குழுவானவர்களும் அவர்கள் எந்த  வகையில்  பாதிக்கப்பட்டார்கள் அல்லது  தொடர்ச்சியாக பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என்னும் மனக்குமுறல்களை உறுதிப்படுத்தப்பட்ட  அதிகாரபூர்வமான ஆவணங்களுடன் (மூல ஆவணங்கள் அன்றி பிரதிகளுடன்) ஏதேனும் பெயரை உறுதிப்படுத்தும் சான்றுகள் அல்லது  அவர்களின் கோரிக்கைகளை உறுதிப்படுத்தும் துணை ஆதாரங்கள் சகிதம்

"கிழக்கு மாகாணத்தினுள் சமூக  அநீதிகளை ஆய்வு  செய்வதற்கான நிபுணர் குழு "

 என்று தலைப்பிட்டு கீழ் குறிப்பிடும் முகவரிக்கு  பதிவுத்தபாலில்

அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மாதிரி விண்ணப்ப படிவம்

1) முழுப் பெயர்:

2  பிறந்த திகதியும் இடமும்:

3) தற்போதைய  முகவரி மற்றும்  

தொடர்பு இலக்கம் ; மின்னஞ்சல் முகவரி:

4) விண்ணப்பம்  செய்பவரின் அடையாள அட்டை இலக்கம் (பிரதியை இணைக்கவும்)

5) விண்ணப்பம் செய்பவரின் தற்போதைய  தொழில் நிலவரம் : வேலைவாய்ப்பு: பொருளாதார  நிலவரம்  அல்லது  வருமான மூலம்:

6) குடும்ப பற்றிய தகவல்கள் : குடும்ப அங்கத்தவர்களின் பெயர் உறவு முறை: முகவரி

7) வருமான மூலம்:

8) குடும்ப  அங்கத்தவர்களின் பெயர்  மற்றும்  அவர்கள்  குடும்பப் பெயர்கள்,குடியியல் நிலை மற்றும் முகவரி ,தற்போதைய  தொழில் நிலவரம் அல்லது  பொருளாதார நடவடிக்கைகள்:

9) பிரச்சினை தொடர்பான சுருக்கமான விளக்கம் உதாரணம் --- வாழ்விடம் மற்றும்  நில புலங்களின் அழிவு, வாழ்வாதார இழப்பு, பயிர்ச்செய்கை செய்வதற்கான உரித்து, சொத்துக்களின் இழப்பு அல்லது  வேறேதேனும் இழப்பு மற்றும்  இதற்கான நிவாரணத்தினை பெற ஆவணங்கள்  சகிதம் உங்களால்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

10) இதுவரையில்  உரிய அதிகாரிகளாலும் உங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மற்றும்  தற்போதைய  நிலை:

11)நிவாரணம் பெறப்பட்டிருப்பின் அவை பற்றிய  சுருக்கம்:

12)ஆதாரமாக  கோவைப்படுத்தப்படும் ஆவணங்களின் பட்டியல்:

13)கோரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானதும் சரியானதும் என கையொப்பமிட்டு அத்தாச்சிப்படுத்தப்பட்ட சத்தியக் கூற்று:



கோரிக்கை அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி:-

செயலாளர்

கிழக்கு மாகாணத்தினுள் சமூக அநீதிகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழு

ஆளுநர்  செயலகம்

கீழ் வீதி

உவர்மலை

திருகோணமலை

தொலைபேசி 0262222102

மின்னஞ்சல் epgovernor@yahoo.com

மேற்சொன்ன  சொன்ன விடயங்கள்  மாதிரி விண்ணப்ப படிவமும் கிழக்கு மாகாண ஆளுநரின் பொது அறிவித்தல்  விபரமுமாகும்.

இவ்விடயம் தொடர்பில்  எனது ஆலோசனைகள்

நாற்பது வருட கால எல்லையில் கிழக்கில்  இடம் பெற்ற சமூக அநீதிகளுக்காக இவ் ஆணைக்குழு அமைக்கப்படுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள்  தமக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்ய  முடியும்.

அவரவர் சமுகம் சார்ந்து தனி நபர்களும் குழுக்களும் இவ்வாணைக்குழவிற்கு முறையீடுகளை செய்யுங்கள்.

உதாரணங்களாக

# கிழக்கு  மாகாணத்தில் எதிர் நோக்கும்  காணிப் பிரச்சினைகள்

 # காணி தொடர்புடைய பாதிப்புகள்

# ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பிலான முறைப்பாடுகள்

# இழக்கப்பட்ட காணி தொடர்பான முறைப்பாடுகள்

# வனத்திணைக்கள மற்றும் தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்புகள்

# புனித பூமி ஆக்கிரமிப்பு தொடர்புடைய முறைப்பாடுகள்

# மேச்சல் தரை தொடர்புடைய பிரச்சினைகள்

# வெளியேற்றப்பட் கிராமங்கள் தொடர்புடைய முறைப்பாடுகள்

# மீள் குடியேற்றம் தொடர்பிலான

# முறைப்பாடுகள் மற்றும்  பொருத்தமான அநீதிகள் தொடர்பில் கிழக்கு மாகாண மக்கள் முறையீடுகளை செய்ய முடியும்.

# தொழில் இழப்புகள், சொத்திழப்புக்கள்,அபிவிருத்தி பாரபட்சம் ,முக்கிய  தேவை மற்றும் அவசியம் செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் அவசியம் செய்ய  வேண்டிய அபிவிருத்தி  புறக்கணிக்கப்படடு வரல் தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்து

# கோறளை மத்திய பிரதேச செயலக எல்லை  நிர்ணய இழுபறி

# கோறளை மேற்கு ஓட்டமாவடி பிரதேசம் இழந்த காணிப் பிரச்சினைகள்

# காத்தான்குடி,ஏறாவூர் மற்றும்  கல்குடா பிரதேசங்களில் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகள்

# மீள் குடியேற்றம் பிரச்சினைகள்

கள்ளிச்சை ,பொத்தானை,மருதங்கேணி,மருதங்குளம்,கிரிமிச்சை வாகனேரி இரு நுறு வில்,உன்னிச்சை ,உருகாமம்,சிப்பிமடு போன்ற பிரதேசங்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள்

# ஏறாவூர் பற்றில் நிலவும் காணிப் பிரச்சினைகள்

# திருமங்களாவட்டை பயிர்ச் செய்கை பிரச்சினை

# காத்தான்குடி  பிரதேச செயலக எல்லை  முரண்பாடு

# மண்முனைப் பற்று பிரதேசத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள்

அதாவது திட்டமிட்ட காணி அடகரிப்பு சவக்காலை அமைத்தல்

# முஸ்லிம் காணி உரித்தை பொய் வழக்கிட்டு அகரிக்க முனையும் நிர்வாக கெடுபிடி

# ஒல்லிக்குளம் ,மணமுனை ஹைராத், பாலமுனை,வேடர் குடியிருப்பு காணி அபகரிப்பு வழக்குகள் போன்ற  அநீதிகள் தொடர்பில்  முறைப்பாடுகளை செய்ய முடியும்.

# மாவட்ட முஸ்லிம் சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப காணி பகிர்ந்தளிக்கப்படாமை தொடர்பிலும் முறைப்பாடு செய்யலாம்

# காணியற்றவர்கள் தமக்கு இது வரை பிரதேச செயலகங்கள் காணி வழங்காமை தொடர்பிலும் முறைப்பிடு செய்யலாம்.

# நீண்ட  காலமாக காணிகளை பயன்படுத்தி வருகின்ற போதும் அதற்கான முறைப்படியான ஆவணங்களை வழங்க மறுக்கும் நிர்வாக அநீதிக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யலாம்

இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமக்கெதிராக நீண்ட  காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநீதிகள் தொடர்பில்  முறைப்பாடுகளை தனியாகவும் குழுவாகவும் மேற் கொள்வதன் மூலம் நமது பிரச்சினைகளை வெளிக்கொணர கிடைத்துள்ள இவ் வாய்ப்பை நாம் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வோம்.

தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும் இச்சந்தர்ப்பம் வழி வகுக்கும்.

மேலதிக  ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் 0777009231 என்ற  எனது கையடக்க  தொலைபேசிக்கு அழைக்கவும்

அனைவரையும் இவ்விடயம் சென்றடைய இப்பதிவை நண்பர்கள் அதிகம் share பகிரவம்.

ஊடக நண்பர்களை மக்களிடம் இவ்விடயத்தை அதிகம் சேர்ப்பிக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்

இவ்வண்ணம்

யூஎல்எம்என் முபீன்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்