Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

வியாழன், 28 ஜனவரி, 2021

ஜனவரி 28, 2021

இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய

 இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் இனவாத ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை


புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய.
இனவாத அரசியல் போக்கானது இலங்கையை பாதிக்கும்-கருஜயசூரிய



நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளைச் சார்ந்தது.

அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

புதன், 27 ஜனவரி, 2021

ஜனவரி 27, 2021

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 25.01.2021 அன்று வெளியிட்ட புதிய covid 19. சுற்றறிக்கையின் படி அன்டிஜன் ரத்து செய்து P C Rதான்  இனி எடுப்பது என்றும். P C R Positive   என்றால் 14 நாள் Quarantine நிலையத்தில் இருக்க தேவையில்லை 10 நாள்

 Quarantine நிலையத்திலும் 4 நாள்  வீட்டிலும் இருக்கலாம் என சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அன்பிஜன் பரிசோதனை ரத்து

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து அன்டிஜன் பரிசோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

Note:- Antigen test என்று யாரும் கூறி வந்தால் #புதிய_சுற்றறிக்கையின் படி அவர்களுக்கு ஒத்துழைப்பு வளங்கவேண்டிய அவசியம் கிடையாது. அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதேசமயம் P C R test ku பூரண ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
ஜனவரி 27, 2021

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை

 கொவிட்  19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது 


எனினும் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிரத்தியோக வகுப்புகளில் மாணவர்களை பலவந்தமாக அணைத்துக் கொண்டு அதற்காக பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்
இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை



அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக  நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதகமான நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்கான ஒரு மாற்று வழியாகவே இணையவழி கற்பித்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது

இதனை தமது பிரத்தியோக வகுப்புகளுக ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுஇவ்வாறான ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்
ஜனவரி 27, 2021

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை!

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு வழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தி இருந்தது இதனை தங்களுடைய சாதகமாகப் பயன்படுத்தி மேலதிக வகுப்புக்களில் மாணவர்களை பலவந்தமாக சேர்த்துக் கொண்டு அதற்கான பணம் கறக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

இணைவழி கற்பித்தல் வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை!


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இணையவழி ஊடாக நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் இதனை தமது பிரத்தியோக வகுப்புக்கு ஆசிரியரகள் பயன்படுத்திக் கொள்வதானயின் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை ஆசிரியர்கள் தங்களின் நடவடிக்ககையாக எடுத்துக் கொண்டார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஜனவரி 27, 2021

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!

 கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!


(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  நாஹூர் தர்ஹாஷரீபின்199வது வருட கொடியேற்று விழா   கொடியிறக்கத்துடன் நிறைவு  இன்று (26) பிற்பகல் நிறைவு பெற்றது.

கொடியிறக்கும் தினமான இன்று விஷேட துஆ பிராத்தனையுடன்   மினாரக்களில் ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கி வைக்கப்பட்டது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் கடந்த (14) வியாழன் கொடியேற்றம் ஆரம்பமாகிகடந்த 12 தினங்களாக  இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது வருட கொடியேற்றம் நிறைவு!



இதன் போது மெளலித் ஷரீப் பாராயணம்,  மற்றும் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன்  குறிப்பாக நாட்டில் கொரானா தொற்றில் இருந்து முழுமையாக   விடுபட வேண்டி  விசேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.
  
இதன் போது உலமாக்கள்,  அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்,சுகாதார பிரிவினர்  பள்ளிவாசல் நிர்வாகிகள்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா  தொற்று காரணமாக இம் முறை கொடியேற்றமானது சுகாதார நடைமுறைகளை  பின்பற்றி  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 27, 2021

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்


காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்களின்  முன் மாதிரியான செயல்பாடு...!!!!


காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கடமையாற்றும் லொக் டவுன்  பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களுக்கு  நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டன

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சிங்கள  சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்

இவர்களில் காத்தான்குடியில் லொக்டவுன் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு   லொக் டவுன் இல்லாத பிரதேசத்திலுள்ள ஆசிரியர்கள் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி தமது முன்மாதிரிய  வெளிப்படுத்தியுள்ளனர்

இவ்வாறு 56 ஆசிரியர்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த நிவாரண பொருட்களை காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் S..H. பிரதெளஸ் அவர்களிடம் குறித்த  ஆசிரியர்கள் இன்று கையளித்தனர்
சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்

சிறந்த ஆசான்களின் மெச்சத்தகு முன் மாதிரிகள்



இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி M.A. அதிபர் நிஹால்  கலந்து கொண்டார்

நானும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் பணி புரிவதில் பெருமையடைகிறேன்.

 தனிமைப் படுத்தல் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து  இந்த  உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை முன்மாதிரியான செயற்பாடாகும்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
27.01.2021