காத்தான்குடி மத்திய கல்லூரி ஆசிரியர்களின் முன் மாதிரியான செயல்பாடு...!!!!
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் கடமையாற்றும் லொக் டவுன் பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களுக்கு நிவாரண பொருட்களை இன்று வழங்கி வைக்கப்பட்டன
காத்தான்குடி மத்திய கல்லூரியில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்
இவர்களில் காத்தான்குடியில் லொக்டவுன் பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு லொக் டவுன் இல்லாத பிரதேசத்திலுள்ள ஆசிரியர்கள் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி தமது முன்மாதிரிய வெளிப்படுத்தியுள்ளனர்
இவ்வாறு 56 ஆசிரியர்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன
இந்த நிவாரண பொருட்களை காத்தான்குடி மத்திய கல்லூரியின் அதிபர் S..H. பிரதெளஸ் அவர்களிடம் குறித்த ஆசிரியர்கள் இன்று கையளித்தனர்
இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி M.A. அதிபர் நிஹால் கலந்து கொண்டார்
நானும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் பணி புரிவதில் பெருமையடைகிறேன்.
தனிமைப் படுத்தல் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து இந்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தமை முன்மாதிரியான செயற்பாடாகும்
எம்.எஸ்.எம்.நூர்தீன்
27.01.2021





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக