Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

திங்கள், 25 ஜனவரி, 2021

ஜனவரி 25, 2021

முழுமையாக ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!

 நான் கூறியவாறு ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!


தாம் கூறியவாறு ஒளடத பாணியை பருகியிருந்தால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் ஹிரு செய்திச் சேவை தம்மிக பண்டாரவிடம் வினவியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தம்மிக்க பண்டார கூறியவாறு, அனைத்து முறைகளையும் பின்பற்றி பாணியை பருகிய தாம் உள்ளிட்ட தமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதியான சிலந்த விஜேபால எமது செய்திச்சேவையிடம் தெரிவித்தார்.

இதேநேரம் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒளடத பாணியை பருகியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை தொடர்பில் அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
நான் கூறியவாறு ஒளடத பாணியை பருகினால், ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்படாது..!!


மருத்துவர் அல்லாத ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும்போது, பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் பி. ஹேவா கமகே தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஜனவரி 24, 2021

மனித உரிமை தொடர்பாக நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை கவனத்தில் எடுக்க வேண்டும் - அசாத் சாலி ...!!!!

 நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத் சாலி ...!!!!


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவில் பங்கேற்கும் நீதிபதி A.H.M.D. நவாஸ் தன் மீதான சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி.

நீதிபதி நவாஸ் இக்குழுவில் இடம்பெறுவதானது, ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அவர் நியாயமான முறையில் நடந்து கொள்வார் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம்களை பாரிய மன உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பும் மனித உரிமை மீறல் என்பதாலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தெற்காசிய மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவும் அரசின் தவறை சுட்டிக்காட்டியிருக்கின்றன.



நீதிபதி நவாஸ் சமூகப் பொறுப்பை மறக்கக் கூடாது: அசாத் சாலி ...!!!!


இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற அடிப்படையில் இந்த அநீதியையும் இணைத்து அதற்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பும் அவர் மீதிருப்பதை நீதிபதி நவாஸ் நினைவில் வைத்து, அல்லாஹ்வைப் பயந்து நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என தாம் வேண்டிக்கொள்வதாகவும் அசாத் சாலி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 24, 2021

பொறுப்புணர்வோடு கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் நண்பர் ஆதம் பாவா ஐயூப்கான்.

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அண்மையில் ஒரு வேலையின் நிமித்தம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குச் சென்ற போது எனது வகுப்பறைத் தோழன் நண்பன் ஐயூப்கானைச் சந்திக்கக் கிடைத்ததில் பேரானந்தம்!

உதவி மாவட்டப் பதிவாளர் காரியாலயத்தில் தனது கடமையிலிருந்த நண்பன் ஐயூப்கான் என்னைக் கண்டதும் ஓடிவந்து, ' எங்கே மச்சான் இந்தப் பக்கம்? தனக்கே உரிய தனிப்பாணியில் என் நெஞ்சில் தனது வலது முன்னங் கையால் தாக்கி சுகம் விசாரித்தார்.
அவ்வாறு தனது தனிப்பாணியில் சுகம் விசாரிப்பதுதான் நண்பர் ஐயூப்கானின் முதற்படி! அது ஐயூப்கான்.தெரிந்தவர்களுக்கு மட்டுந்தான் தெரியும்! சில நண்பர்கள் ஐயூப்கானைக் கண்டதும் இவ்வடிகளுக்குப் பயந்து ஓடி ஒழிப்பதுமுண்டு! 

இத்தனைக்கும் நண்பர் ஐயூப்கான் பொல்லாதவரும் அல்ல! சிறந்த பண்பாளன்! எவரை எந்த இடத்தில் கண்டாலும் மரியாதையோடு உரிய உறவு முறைகளை, முறைப்படி சொல்லி அழைப்பதில் முதன்மையானவர். சிறந்த ஒழுக்கப் பண்புகள் நிறைந்த, கல்விமான்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த முத்து! இந்த முத்துக்கு வித்திட்டவர் விலேஜ் ஹெட்மேன் மர்ஹூம் ஆதம்பாவா அவர்கள். 

நண்பர்களான தாஹீர்கான், ஐயூப்கான் போன்றவர்களோடு தோட்டத்துப் பள்ளியில் படிக்கின்ற காலம் மிக இனிமையானது. அல்-அஷ்றக் காலம் அதை விட இனிமையும் பசுமையும் நிறைந்தது. அக்காலத்தில் நண்பர்களின் குடும்பத்தில்தான் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில் புரிந்தனர். அக்காலத்தில் ரீ சேட், றெணிங் றவுசரை இவர்கள் குடும்பத்தில்தான் அதிகமாகக் காண முடியும்! நாங்களும் அவைகளில் நனைந்ததுண்டு! சாதிக் காக்கா, உடையான் காக்கா, பசீல் காக்கா, றாஜா கான் தம்பி, இரண்டு ராத்தாமார் என்று எல்லோருமே அன்பானவர்கள்! முறக்க முடியாத குடும்பம்!
பொறுப்புணர்வோடு கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் நண்பர் ஆதம் பாவா ஐயூப்கான்.


இலங்கையில் எந்த இடத்தில் கண்டாலும் அன்பு, ஆதரவுக்குப் பஞ்சமில்லை! பதறிப்போய் விழுந்து விழுந்து ஆதரிக்கும் பண்பாளர்கள்! பலமொழிகளைப் பயன்படுத்தும் சொல்லாற்றல் கொண்டவர்கள்! எந்த உயர்பதவியைக் கொடுத்தாலும் அதனை அலங்கரிக்கச் செய்யும் ஆற்றலுள்ளவர்கள்! 

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோரில் நிந்தவூர் மண் ஈன்ற ஒரே ஒரு அதிகாரக் கதிரைக்குரியவர் நண்பர் ஐயூப்கான்! இவருக்குப் பிரதேச செயலாளர் பதவி வழங்கினாலும் துணிவோடும், பணிவோடும் செய்து முடிப்பதில் வல்லவர். நண்பர் ஐயூப்கான் இன்று போல் என்றும் வாழ, எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரமேந்திப் பிரார்த்திக்கிறேன்.
ஜனவரி 24, 2021

காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?

 கோத்தாவின் ஆட்சியில் காதி நீதிம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் : முபாற‌க் அப்துல் ம‌ஜீத் 


ஒரு சில‌ காதிமாரின் பிழையான‌ ந‌ட‌வ‌டிக்கைக்காக‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ம‌ட்டும் அதிகார‌மாக‌ கொண்ட‌ காதி நீதிம‌ன்ற‌ ந‌டைமுறையை நீக்க‌ முடியாது என‌ உலமா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். இது ப‌ற்றி இன்று ஊட‌க‌ங்க‌ளுக்கு கருத்து தெரிவித்த அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, 

முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌  இருந்த‌ போது ஒரு சில‌ முஸ்லிம் பெய‌ர் தாங்கி பெண்க‌ளின் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ங்க‌ளைத்திருத்த‌ வேண்டும் என்ற‌ கோரிக்கைக‌ள் எழ‌ ஆர‌ம்பித்த‌ன‌. இத‌ற்கு மு. கா தலைவர் ஹ‌க்கீமும்  ஆத‌ர‌வு கொடுத்த‌தன் கார‌ண‌மாக‌ இக்கோரிக்கைக‌ள் வ‌லுப்பெற‌ ஆர‌ம்பித்த‌ன‌. எந்த‌வொரு க‌ருத்தும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியின் க‌ருத்தாக‌ இருப்பின் அது ம‌க்க‌ளின் க‌ருத்தாக‌வே பார்க்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் மு. கா தலைவர் ஹ‌க்கீமின் முன்னெடுப்புக்க‌ள் ச‌மூக‌த்தின் முன்னெடுப்பாக‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு அனும‌திக்க‌ முடியாது என்றும் இவ்வாறு திருத்த‌த்துக்கு இட‌மளிப்ப‌து எதிர் கால‌த்தில் காதி நீதிம‌ன்ற‌ங்க‌ளையே ஒழிக்க‌ச்செய்வ‌தில் கொண்டு போய் முடியும் என்ப‌தை உல‌மா க‌ட்சி அன்றே எதிர்த்த‌து. முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்துக்கெதிரான‌ சில‌ முஸ்லிம் பெண்க‌ளின் கோரிக்கைக‌ள் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளின் பின்ன‌ணியில் சில‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளின் நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத‌ பெண் ச‌ட்ட‌த்த‌ர‌ணிக‌ளும் இருப்ப‌தை க‌ண்டோம். 

இத‌ன் பின்ன‌ணியில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் கொண்டு வ‌ர‌ வேண்டிய‌ திருத்த‌ங்க‌ளை ஆராய‌ க‌ட‌ந்த‌  அர‌சாங்க‌ம் இர‌ண்டு குழுக்க‌ளை நிய‌மித்த‌து. இந்த‌  இர‌ண்டு குழுக்க‌ளின் மாறுப‌ட்ட‌ அறிக்கைக‌ள் நாட்டில் பேசு பொருளான‌ போது இவ்விர‌ண்டு அறிக்கைக‌ளையும் ப‌கிர‌ங்க‌மாக‌ நிராக‌ரித்த‌ நாம் க‌ண்டித்த‌  எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் துணை போவ‌து காதி நீதிம‌ன்ற‌  ந‌டைமுறையையே இல்லாம‌ல் செய்வ‌தில் முடியும் என‌ எச்ச‌ரித்த‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும்.

இறைவ‌ன் உத‌வியால் க‌ட‌ந்த‌ ஆட்சியில் இது எதுவும் ந‌டை பெற‌வில்லை. இப்போது இந்த‌ ஆட்சியில் சில‌ இன‌வாதிக‌ள் காதிநீதிம‌ன்ற‌த்தை ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கோரிக்கை விடுப்ப‌தும் க‌ட‌ந்த‌ கால‌ மீதிகளே.

இந்த‌ நாட்டில் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌மே இன்ன‌மும் உள்ள‌து. நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளான‌ கிரிமின‌ல், சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் அனைத்து ம‌க்க‌ளுக்கும் ஒன்றாக‌வே உள்ள‌து. திரும‌ண‌ ச‌ட்ட‌ம் ம‌ட்டும் க‌ண்டிய‌ சிங்க‌ள‌ ச‌ட்ட‌ம், யாழ்ப்பாண‌ தேச‌ வ‌ழ‌மை ச‌ட்ட‌ம், முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என‌ உள்ள‌ன‌. இவை திரும‌ண‌த்துட‌ன் ம‌ட்டுமே தொட‌ர்பு ப‌ட்ட‌தாகும்.  எவ்வாறு பொலிஸின் கீழ் சாம‌ ம‌ண்ட‌ல‌ எனும் ச‌மாதான‌ நீதவான் ம‌ன்ற‌ம் உள்ள‌தோ  அது போன்ற‌ பெரிய‌ அதிகார‌ம் எதுவும‌ற்ற‌ நீதிம‌ன்ற‌மே காதி நீதிம‌ன்ற‌மாகும். அத‌ன் ச‌ட்ட‌ங்க‌ள், ந‌டைமுறைக‌ள் என்ப‌ன‌ பொதுவான‌ நீதி ம‌ன்ற‌ ச‌ட்ட‌த்தின் கீழேயே செய‌ல்ப‌டுகின்ற‌ன‌. இவை அனைத்தும் ஒரே நாடு ஒரே ச‌ட்ட‌த்தின் கீழேயே உள்ள‌ன‌.

சில‌ காதி நீதிவான்க‌ள் பிழையாக‌, ஊழ‌ல்வாதிக‌ளாக‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டை சில‌ர் முன் வைக்கின்ற‌ன‌ர். பொதுவாக‌ எல்லா நிர்வாக‌த்திலும் த‌வ‌றான‌வ‌ர்க‌ள், ஊழ‌ல்வாதிக‌ள் உள்ள‌ன‌ர்.  சில‌ நீதிப‌திக‌ள், பொலிசார் மீது கூட‌ ஊழ‌ல் குற்ற‌ச்சாட்டுக்க‌ள் உள்ள‌ன‌ என்ப‌த‌ற்காக‌ முழு நீதி ம‌ன்ற‌ க‌ட்ட‌மைப்பையும் ர‌த்து செய்ய‌ வேண்டும் என‌ கூற‌ முடியாது. ஊழ‌ல்வாதிக‌ளை, க‌ட்டுப்ப‌டுத்த‌வே பொலிஸ், ஊழ‌ல், ல‌ஞ்ச‌ த‌டுப்பு ச‌ட்ட‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ற்றில் முறையிட‌ முடியும். க‌ட‌ந்த‌ ஆட்சி முழுக்க‌ முழுக்க‌ ஊழ‌ல்வாதிக‌ளாலும், மோச‌டிக்கார‌ர்க‌ளாலும் நிர‌ம்பி வ‌ழிந்த‌தால் ம‌க்க‌ளுக்கு நீதி கிடைக்காத‌தால் இவை பாரிய‌ பிர‌ச்சினைக‌ளாக‌ தெரிந்த‌ன‌.
காதி நீதிமன்றம் தொடர்பான குற்றச்சாட்டு உண்மையா?



ஆனால் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ த‌லைமையில் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சியில் ஊழ‌ல்வாதிக‌ளும், ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌வ‌ர்களும் க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தையும், திற‌மைசாலிக‌ளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை காண்கிறோம். இத்த‌கைய‌ சிற‌ப்பான‌ ஆட்சியில் காதிமார் நேர்மைக்கு மாற்ற‌மாக‌ செய‌ல்ப‌ட‌ முடியாது என்ப‌தால் காதி நீதி ம‌ன்ற‌ம் மூல‌ம் பெண்க‌ளுக்கு அநீதி இன்றி நிச்ச‌ய‌ம் நியாய‌ம் கிடைக்கும் என‌ நாம் ந‌ம்புகிறோம். அந்த‌ வ‌கையில் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திலோ, காதி நீதிம‌ன்ற‌ ந‌டவ‌டிக்கைக‌ளிலோ எத்த‌கைய‌ திருத்த‌த்தையோ, மாற்றுத‌லையோ கொண்டு வ‌ர‌ யாரும் முய‌ற்சிக்க‌ வேண்டாம் என‌ கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நூருல் ஹுதா உமர்.
ஜனவரி 24, 2021

எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.

 சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் எம்.எம்.எம். நூறுல் ஹக் வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வயின்னாயிலஹி ராஜியுன் 

வித்தகர் விருது பெற்று விடைபெற்றார்.

அவர் சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள மகளின் வீட்டிலேயே காலமானார்.



யா அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்க பிரார்த்திற்திற்றேன்.
ஜனவரி 24, 2021

என்றும் எல்லோர் மனதிலும் இருக்கும் வரக பொல அபுல் ஹசன் ஹாஜியார்




இலங்கையின் இரண்டாவது பிரதமர் டட்லி சேனாநாயக்க கேம்பிரிட்ஜில் படித்துவிட்டு மீரிகம திரும்பிய போது அவரது தந்தை DSசேனாநாயக்க தனது மகனை வரகாபொல அபுல் ஹஸன் ஹாஜியாரிடம் அனுப்பிவைத்து " எனது மகனுக்கு நல்ல ஒரு ஆசானாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருப்பீர்கள்" என்ற நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பதாகக் கூறியிருந்தார்".

அபுல்ஹஸன் ஹாஜியார்.

1.வரகாபொல பொலிஸ்நிலையத்திற்கான காணியை அன்பளிப்பாக வழங்கியவர்.

2.கள்எலிய முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்களில ஒருவர்.

3. வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் காணியை வழங்கியவர்

4.தாருல் ஹஸனாத் 8 ஏக்கர் காணியை அன்பளிப்பாக வழங்கியவர் 

5.வரகாபொல டவ்ன் ஜும்ஆ பள்ளிவாசலின் காணிகளை வழங்கியவர்.

6. வேவல்தெனிய பள்ளிவாசல் காணியை வழங்கியவர்.

7. ஹஸன்புர வீடமைப்புத்திட்டம்

8. வரகாபொல மற்றும் கணிதபுர பள்ளிவாசல்களுக்காக தனது சொந்தக் கடைகளை வக்ப் செய்தவர்.

 9. சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு கூடதலான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர்.

10. மக்காவில் உள்ள  பைதுல் பாஸியைச் சேர்ந்த இமாம் டாக்டர் இப்றாஹீம் அல்பாஸி அவர்களின் ஆன்மீக வழிகாட்டலோடு இலங்கையர்களுக்கு பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர்.

வல்லநாயன் அன்னாருக்கு மேலான ஜன்னதுல் பிர்தௌஸை வழங்குவானாகவும்.
ஜனவரி 24, 2021

பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு

 (றியாத் ஏ.மஜீத்)


சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.

கணக்காளர் சேவையில் சுமார் 06 வருட கால அனுபவத்தைக் கொண்டவர்.

இவர் சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் ஜப்பார் தம்பதியினரின் புதல்வியாவார். கணவர் எம்.ஐ.எம்.லரீப் பொது கணக்கு பரிசோதகராவார்.



சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.நஜிமுதீன் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.