(றியாத் ஏ.மஜீத்)
சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக நியமிக்கப்பட்ட ஏ.ஜே.நுஸ்ரத் பானு திங்கட்கிழமை (18) தனது கடமைகளை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இவர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.
கணக்காளர் சேவையில் சுமார் 06 வருட கால அனுபவத்தைக் கொண்டவர்.
இவர் சாய்ந்தமருதை சேர்ந்த அப்துல் ஜப்பார் தம்பதியினரின் புதல்வியாவார். கணவர் எம்.ஐ.எம்.லரீப் பொது கணக்கு பரிசோதகராவார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.நஜிமுதீன் வருடாந்த இடமாற்றம் பெற்று கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக