தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட சிங்கள மொழி மூலமான சான்றிதழ்களை வெற்றியாளர் ஏற்கமறுத்ததுடன் அவ்விடத்தில் சிறு அமைதியின்மை ஏற்பட்டது.
இது கிளிநோச்சியில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வாகும்.வழங்கப்பட்ட சான்றிதழானது முழுக்க சிங்கள மொழியிலேயே காணப்படட்து. இந்திலையில், இந்நிகழ்வின் போது குறிப்பிட்ட இளைஞன் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியமானவர்கள் ஒப்பத்துடுன் வழங்கப்பட்டுள்ளது. இவை
இவ்விடயம்தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்றஉதவி பணிப்பாளர் தபேந்திரன் குறிப்பிடுகையில்,
இச்சம்பவம் தொடர்பில் மாகாண உதவி பணிப்பாளர்மற்றும் மாவட்ட உதவி பணிப்பாளர்களின்கையொப்பத்துடன் அவர்களிற்கு தேவையான மொழியில் சான்றிதழ்களைவழங்குமாறு தலைமை காரியாலயத்திலிருந்து அறிவித்தல் வழங்கப்பட்டள்ளதுஎன்றார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக