சம்மாந்துறைபிரதேசத்திலுள்ள தனியார் கல்வி நிலைங்களைகற்பித்தல் செயற்பாட்டிற்காக மீளதிறக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியசுகாதார விதிமுறைகள் தொடர்பான ஆராயும் விசேட கலந்துரையாடல்சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட்நௌஷாட் தலைமையில் பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
கோரோனாதொற்று காரணமாக பல மாதங்களாகமூடப்பட்டிருந்த தனியார்கல்வி நிலையங்களை சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைவாகஎதிர்வரும் 25ஆம் திகதி அரசாங்கம்மீள திறக்குமாறு அறிவித்துள்ளது.
இதன்போதுகல்வி கற்கும் மாணவர்களின் சுகாதார நடைமுறைகள்சமூக இடைவெளி பேணல், முககவம்அணிதல் தொற்று நீக்கி பாவனை, நாளாந்தம்வருகை தரும் மாணவர்களுக்கு பதிவேடுபேணுவது, கல்வி நிலையத்தின் அடிப்படைசுகாதார நடைமுறைகளை மேம்படுத்தி தனியார் கல்வி செயற்பாடுகள்முன்னெடுப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபை உபதவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிடாக்டர் எஸ்.ஐ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேசசபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர்எம்.ஏ.சபூர் தம்பிமேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல். றாசிக், தனியார்கல்வி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக