மட்டக்களப்புவாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கறுவாக்கேணியில்வீதியோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலமொன்று (20.01.2021) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சடலமாகமீட்கப்பட்டவர் கறுவாக்கேணியைச் சேர்ந்த வே.தங்கராசாவயது (58) என்ற 4 பிள்ளைகளின் தந்தைஎன அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்தநபர் நேற்று காலை வீட்டிற்குவந்து மனைவியிடம் கொடுத்து வைத்திருந்திருந்த ஒரு இலட்சம் ரூபாபணத்தில் கடன் செலுத்த வேண்டுமெனகூறி 95,000 ரூபாவை பெற்றுச் சென்றவர்வீடு திரும்பாத நிலையில், வீட்டின் முன் வீதியில் ஓரத்தில்தேங்கி நின்ற வெள்ள நீரில்முகம் குப்பற கிடந்த நிலையில்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்சம்பவம் இடத்திற்கு தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டுதிடீர் மரண விசாரணை அதிகாரிஎம்.எஸ்.எம். நசீர்விசாரணைகளை மேற்கொண்டார்.
மேலும்சடலம் உடற் கூற்று ஆய்விற்காகமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளதாககூறப்படுகின்றது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக