செவ்வாய், 2 பிப்ரவரி, 2021
Eastern
பிப்ரவரி 02, 2021
(யு.எம்.இஸ்ஹாக்,சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அண்மையில் எழுதி வெளியிட்ட "நிதி முகாமைத்துவம் " நிதிப்பிரமாணங்களும் ,நிதி நடைமுறைகளும் என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் கல்வியியலாளர்களை கெளரவப்படுத்தும் திட்டத்தின் கீழ் பெறுமதி வாய்ந்த இந்த நூலை வெளியிட்டு வைத்ததை முன்னிட்டு கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ்வை அவரது வீடு தேடி சென்று வாழ்த்தி நினைவு சின்னம் , நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனர்.
நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையிலான அமைப்பின் குழுவினர் நேற்று இரவு கணக்காளரின் வீட்டுக்கு சென்று இந்த பாராட்டு நிகழ்வை நடாத்தினர்.
பாராட்டைப் பெற்ற கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் அங்கு உரையாற்றுகையில் நான் பல மேடைகளில் பேசி இருக்கின்றேன் பல கருத்தரங்குகளை நடாத்தியிருக்கின்றேன் ஆனால் என்னை வீடு தேடிவந்து பாராட்டிய இந்த நிகழ்வு என் இதயத்தை நெகிழ வைத்துள்ளது . இதனை என் வாழ்வில் ஒரு போதும் மறந்து விட முடியாது. இதற்காக நற்பிட்டிமுனை அல் - கரீம் பவுண்டேஷன் அமைப்பினருக்கு உள்ளார்த்தமான நன்றியை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் , அதிபர்களான வீ.எம்.ஸம்ஸம் ,ஏ.எம்.சாலிதீன் மௌலவி ,திருமதி ஏ.முனாஸிர்,ஆசிரியர் ஏ.எல்.அஷ்ரப் , அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயிஸ் ,பொருளாளர் யு.எம்.இஸ்ஹாக் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
Health
பிப்ரவரி 02, 2021
65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது சிறப்பு
65 வயதை கடந்தவர்கள் பின்வரும் 10 செயல்களை செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
1. கூடுமானவரை துணை இன்றி படிகளில் ஏறாதீர்கள்.
2. வேகமாக திரும்பாதீர்கள்.
3. கால் பாதத்தை தொடுமாறு குனியாதீர்கள்.
4. நின்றவாறு கால்சட்டை(Pant) மாட்டிக் கொள்ளாதீர்கள்.
5. Sit-ups அதாவது எதையும் பிடிக்காமல் மல்லாக்க படுத்தபடி தலையை உயர்த்தி எழுந்திருப்பதான பயிற்சிகளை செய்யாதீர்கள்.
6. இடுப்பை இடமும் வலமுமாக திருப்பாதீர்கள்.
7. பின்புறமாக நடக்காதீர்கள்.
8. எடை கூடிய பொருட்களை குனிந்து தூக்காதீர்கள்.
9. படுக்கையில் இருந்து எழும் போது உடனடியாக எழுந்து நிற்கவோ நடக்கவோ செய்யாதீர்கள்.
10. உங்களை எந்த வகையிலும் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
பின்வரும் நான்கு விசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
1. தொண்டையில் உணவு அடைத்துக் கொண்டால் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்துங்கள். அடைத்துக் கொண்ட உணவானது தானாக இறங்கும்.
2. சரியான தலையனையை உபயோகிக்காவிட்டால் கழுத்து வலிக்கும். அப்போது கால்களை ஒவ்வொன்றாக உயர்த்தி கால் விரல்களை மிருதுவாக பிசைந்து கொள்ளுங்கள். வலி சரியாகும்.
3. கால்களில் திடீரென தசை இறுக்கமோ அல்லது சுளுக்கு ஏற்பட்டது போல் வலியோ வந்தால் எதிர்பக்க கையை உயர்த்த வேண்டும். வலது கால் வலித்தால் இடது கையையும் இடது கால் வலித்தால் வலது கையையும் உயர்த்துங்கள். நீங்கள் நலமாக உணர்வீர்கள்.
4. திடீரென பாதத்தில் கூச்சம் ஏற்பட்டால் எதிர் புறத்து உள்ளங்கையை வேகமாக சுழற்றுங்கள்.
இது உபயோகமானது எனக் கருதினால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Srilanka
பிப்ரவரி 02, 2021
பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருகை
இம்மாதம் 23ஆம் திகதி இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருப்பார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.
யுத்த காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.
அத்துடன் கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Srilanka
பிப்ரவரி 02, 2021
மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள
மியன்மார் சம்பவம் இலங்கைக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கை.. – மங்கள சமரவீர..!
மியன்மாரில் ஜனநாயக நிர்வாகத்தைக் கவிழ்த்து இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ‘சிவில் மற்றும் நிர்வாக அதிகாரங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும்போது, மக்கள் ஆணைக்கு வலுச்சேர்க்கின்ற தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் செயற்பாடுகள முடிவிற்குக்கொண்டு வருவதற்கு அவர்கள் முற்படுவதைத் தவிர்க்க முடியாது.
இது மியன்மாரில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்
Education
பிப்ரவரி 02, 2021
பாடசாலை மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா பரிசோதனை...!
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் என்டிஜன் கொரோனா பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களைஅகடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் இன்று தொடக்கம் அப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 02, 2021
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!
இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...!
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் என்டிஜன் கொரோனா பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்களைஅகடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் இன்று தொடக்கம் அப்பரிசோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.
News
பிப்ரவரி 02, 2021
இளம் வைத்தியர் கொரணாவால் உயிரழப்பு
இலங்கையில் சுகாதாரத் துறையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் கொய்யா காரணமாக மரணமடைந்துள்ளார் Rest in Peace Dr. Gayan Danthanarayana, first medical officer died for .Covid 19 இலங்கையில் முதலாவது இளம் வைத்தியர் .Dr.Gayan Danthanarayana..கொரொனா தொற்று காரணமாக மரணம் அடைந்த து கவலையளிக்கிறது
(Dr.gayan.மனைவியுடன்..)













