சாய்ந்தமருது ஜனாஸாவின் PCR Test Negetiveவாக இருந்தும் கூட நல்லடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதில் நிலவிய இழுபறிக்கு ஒரு சட்டத்தரணியாக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்து குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய உதவிய சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனையின் மேயருமான கௌரவ ஏ.எம். ரகீப் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பல வாரங்களாக. உன்மைகள் மறைக்கப்பட்டு உறவினர்களிடம்
ஒப்படைக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவை தனது மனிதாபிமான பண்பினால் இரவு பகல் பாராது இதற்கு பொறுப்பானவர்களிடம் கலந்துரயாடியும் தனது வாதத்திறமையினாலும் ஒரு சதமேனும் பணம் பெறாமல் எங்கள் குடும்ப ஜனாஸாவினை உண்மையை வெளிசத்துக்கு கொண்டு வந்து ஜனாஸாவை அடக்கம் செய்வதற்க்கு வழி அமைத்து தந்த கல்முனை மாநகர முதல்வர் சகோதரர் சட்டத்தரணி றக்கீப் அவர்களையும் அவருக்கு பக்க துணையாக நின்று வாதாடிய சக சட்டத்தரணிகளையும் எங்களது குடும்பம் சார்பகவும் முஸ்லீம்கள் சார்பாகவும் எங்களது மனமாந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் வல்ல நாயன் இதற்குரிய நற்கூலியை வழங்க வேண்டுமென இறைவனை பிராத்திக்கின்றோம்
குறிப்பு.. இவர் எங்களிடம் விடயங்களை கேட்டறிந்து கொண்டதன் பின் கூறிய வார்த்தை இந்த விடயத்தை நான் பாரம் எடுப்பது பணம் பெறுவதற்க்கோ அரசியலுக்கோ
அல்ல எமது இனத்தின் ஜனாஸா ஒன்று
அனியாயமாக எரிக்கப்படக்கூடாது இதில் நான்
இன்ஸா அல்லாஹ் இறைவன்
உதவியோடு வெற்றியை பெற்றுத்தருவேன் என வாக்குறுதிதந்தார்
லத்தீப்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக