Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

வியாழன், 21 ஜனவரி, 2021

மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதும் அவசியமானது அமெரிக்க தூதுவர் அலைனா கருத்து


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும், மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைக்கிணங்க அடக்கம் செய்யுமாறு பல்வேறு தரப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸினால் மரணித்தத அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதென குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின்படி மத நம்பிக்கைகளை பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.



இலங்கை 1955 இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல், பின்பற்றுதல், வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்று சர்வதேச சவால்களை உருவாக்கினாலும் இதற்காக இரக்க குணத்தையும் நம்பிக்கைகளை மதிப்பதையும் இழக்கும் நிலையேற்படக்கூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக