Tamil News

my site is Afghanistan, Australia, Business, Canada, Celebrate, China, Credit Card, Cricket, Economic, Egypt, Entertainment, Euruzone, Facebook, Film, Finance, Funny, Germany, Greed Card, India, Insurance, Iran, Iraq, Italy, Japan, Kim Kardarshian, Korea, Law, Libya, Loan, Maldives, Money, Mortgage, News, Pakistan, Political, Russia, Saudi Arabia, Science, Software, Spain, Sports, Srilanka, Sriya, Stock Market, Finance, Strange, Technology, Tourism, UK, USA, Visa, World News, Mobile, Phone.

LightBlog

Breaking

வெள்ளி, 29 ஜனவரி, 2021

ஜனவரி 29, 2021

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

 சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ளமைக்கு எமது சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர் ஒரு சிறந்த கல்வி நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். மேலும் இவரது சேவைகள் தொடரட்டும்.




சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹூதுல் நஜீம் அவர்கள் SLEAS-1 தரத்திற்கு பதவியுயர்வு

ஜனவரி 29, 2021

சுவீடன் நாட்டில் வருடாந்த கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்

 அம்பாரைமாவட்டம் வரிப்பத்தான் சேனை அகமட் லெப்பை பாயிஸ் இன்ஷாபா அவர்களின் 12 வயது அருமை புதல்வி ஹம்தா அவர்கள் சுவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதல் நிலை பெற்றுள்ளார். இவருடைய ஒவியம் பல இலட்சம் பிரதிகளாக சிறுவர் நலன்புரி அமைப்பொன்றிற்காக பல மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சவீடன் நாட்டில் வருடாந்த  கலைஞர்களுக்கான தேசிய போட்டியில் முதலாமிடம்


ஜனவரி 29, 2021

பெண்கள் மறுமணம் செய்வது பாவமா? - படித்ததில் பிடித்தது

மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல 

மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல ...

காமத்தில் மட்டும் தான் ஆண்களின் ..பங்கு..
நாங்கள் காலமும் செய்ய 
இங்கு ஆயிரம் உண்டு 

பெண்மை என்ற சொல் உடல் சார்ந்த ஒன்றுமில்லை 
உள்ளன்பு உயர் தியாகம் 
இவை இன்றி வேறில்லை 

மகர் கொடுத்து பெண்ணெடுத்து மாடு போல நடத்துபவனை நெஞ்சை ஏறி மிதித்து 
மீண்டு வந்தால் பாவமில்லை 

#நாங்கள் 

கட்டிலினை அலங்கரிக்கும் 
பொருளுமில்லை ..
நீங்கள் காமத்தில் விளையாடும் பொம்மை இல்லை
 
சமுதாயம் தூற்றும் என அஞ்சிக் கொண்டு  சாகும் வரை
 உரிமை இழக்க நாங்கள் ஒன்றும்
அடிமை இல்லை 

உள்ளத்தின் உணர்ச்சிகளை 
புரியாமல் வெறும் உடல் 
தின்னும் மிருகத்தை கட்டிக் கொண்டு 

பண்பாடு கலாச்சாரம் என்று 
சொல்லிக்கொண்டு நாங்கள் ..படும் பாடை 
சரி செய்யா சமுதாயமே....!

வந்து விட்டு உண்டு விட்டு 
சென்று விடுவீர். 
எங்கள் வாழ்க்கை வீணாய் போய் விட்டால் நீயா தருவீர்? 

காமத்தில் மட்டும் தான் 
ஆண்களின் பங்கு.
 நாங்கள் காலமும் செய்ய இங்கு ஆயிரம் உண்டு. 



மெட்டி போட்டு 
மேளம் தட்டி 
மேடை மீது தாலி கட்டி 
கையைப் பிடித்தவன் கயவன் என்றால் 
நானா பொறுப்பு??? 

முதல் வாழ்க்கை முறிதல் 
பாவமுமில்லை ....
அந்த பாவி தொட்ட உடல் என்பதால் கேவலமுமில்லை

மனம் பார்த்து மணம் 
கொள்ளவன் ஆண்களின் கூட்டம். மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன் ஆண்டவன் தோற்றம்.

திருமணம் தோற்பதால் வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
 மறுமணத்தை தேடும் பெண் மட்டமான பொருளல்ல 

நாங்கள் வாழ்வில் 
தடுக்கித் தான் போனோம் 
தவறி ஒன்றும் போகவில்லை 

தோற்றாவிடியிலும் பரவாயில்லை 
தூற்றாமல் கடந்து செல்லுங்களேன்.

ஜனவரி 29, 2021

இந்தியாவின் 500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!


இலங்கைக்கு வந்து சோ்ந்தன இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்...!!

இந்தியாவில் இருந்து 500,000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சிறப்பு விமானத்தில் இலங்கைக்கு வந்தன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு மருத்துவமனையில் தொடங்கும்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஆறு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் மீது தடுப்பூசி திட்டம் நாளை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!

இந்தியாவின்  500,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள்  இலங்கைக்கு வந்து சோ்ந்தன!!!



கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனை, கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனை, ஹோமகாமா அடிப்படை மருத்துவமனை, கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை மற்றும் அங்கோடாவில் உள்ள தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் (ஐடிஎச்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்தார். 

இந்த மருத்துவமனைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறினார்.

மீதமுள்ள ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் ஹேமந்தா ஹெரத் மேலும் தெரிவித்தார்.
ஜனவரி 29, 2021

கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!

 நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...


இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா மேலும் கூறினார்.

வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்இ அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர்இ குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரணாவிற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்...!



கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29, 2021

விமானப் படையினரால் கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

 கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!


கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.

அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.

இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை விடுத்துள்ள அறிவிப்பு...!!!!  கொழும்பு வாழ் மக்களுக்கு இலங்கை விமானப் படை தலைமையகம் முக்கிய அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. அதன்படி கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.  நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்விற்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் ஈடுப்பட்டுள்ளன.  அந்த வகையில் விமானப் படை விமானங்கள் நேற்று முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான் சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.  இதனால் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிரத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபடும் விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாக துஷான் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 29, 2021

கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்

 

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை  ஏற்றிக்கொண்ட முதல் வைத்தியர்!


இலங்கையில் கொரோனா தடுப்பூசியை அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் (ஐ.டி.எச்) மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம பெற்றுக் கொண்டுள்ளார்.
கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்

கொரணா தடுப்பூசி ஏற்றியை வைத்தியர்



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனீகா கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆறு வைத்தியசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், முதலாவது தடுப்பூசி படையினருக்கு செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டமாக இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.